தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்கொக் நகரில் நடைபெற்றுவந்த 2ஆ-வது ஆசிய இளையோர் தடகள சம்பியன்ஷிப் போட்டித் தொடர் நேற்று நிறைவடைந்தது.
இந்தத் தொடரின் பதக்கப் பட்டியலின் அடிப்படையில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது. 16 தங்கம், 9 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களை சீனா வென்றுள்ளது.
இந்தத் தொடரில் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ள சீன தைபே அணி 6 தங்கம், 7 வெள்ளி, 2 வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளது. அதேபோல் இந்த தொடரில் இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 14 பதக்கங்கள் பெற்று பட்டியலில் 3ஆ-வது இடத்தை பிடித்தது.
இலங்கை அணி ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப்பதக்கத்தை மாத்திரம் பெற்று 17ஆவது இடத்தைப் பிடித்தது.
இந்தத் தொடரில் ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் நவோத்திய சங்கல்ப வெண்கலப் பதக்கத்தை வென்றார். இவர் பந்தயத் தூரத்தை 53.8 வினாடிகளில் கடந்தார். அதேபோல் ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஹர்ஸ கருணாரத்ன வெள்ளிப் பதக்கத்தை இலங்கைக்கு வென்று கொடுத்தார்.
2000 மீற்றர் தடைதாண்டி ஓடும் போட்டியில் பங்குபற்றவிருந்த இலங்கை வீராங்கனை ஹஷ்மிகாவுக்கு போட்டியில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பை போட்டி அதிகாரிகள் மறுத்ததையடுத்து மற்றொரு பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை இலங்கை தவறவிட்டது.
ஒரே வீராங்கனை இரு போட்டிகளிலும் கலந்துகொள்ள முடியாது என்பதனை இலங்கை அணி அதிகாரிகள் தெரிந்திருக்காததால் ஹஷ்மிகாவுக்கு இரண்டு போட்டிகளிலும் பங்குபற்றும் வாய்ப்பு பறிபோனமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM