நோர்வேயின் பின்னணியுடனேயே ஞானசார தேரர் மதவாதத்தை நாட்டில் ஏற்படுத்திக் குழப்பங்களை ஏற்படுத்துகிறார் எனக் குற்றஞ்சாட்டும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் அரச சார்பற்ற நிறுவனங்களும் இதற்கு துணைபோகின்றன என்றும் குற்றம்சாட்டியது.
இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்;
நாட்டில் அரசியல் ஸ்திரமில்லா நிலைமையை ஏற்படுத்தி சிங்கள – முஸ்லிம் மக்களிடையே மோதல்களை ஏற்படுத்தும் தேவை நோர்வே உட்பட பல மேலைத்தேய நாடுகளுக்கு தேவையாகவுள்ளது. அவ்வாறான ஒரு நிலைமையை ஏற்படுத்தினால்தான் நாட்டைப் பிரித்து தனித் தமிழீழத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் வெற்றிபெறும். இதற்கு முன்னரும் நோர்வே இலங்கை பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு குழப்பங்களை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் இயங்கின.
கடந்த காலங்களின் முயற்சிகள் தோல்வி கண்டதால் இவர்கள் மீண்டும் தமது வேலையை ஆரம்பித்துள்ளனர். அதற்காக ஞானசார தேரரின் பொதுபலசேனாவை பயன்படுத்துகின்றனர். ஞானசார தேரர் மூலம் நாட்டுக்குள் சிங்கள – முஸ்லிம் மோதல்களை ஏற்படுத்தி குழப்பகரமான சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
அதன் செயல்களே தற்போது நாட்டில் அரங்கேறுகின்றன. அரச சார்பற்ற நிறுவனங்களை கட்டுப்படுத்த வேண்டும்.இந்தியாவில் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால் இலங்கையில் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லை. ஏனென்றால் இன்றைய ஆட்சியை ஏற்படுத்தியவர்கள் அவர்களே ஆகும்.
எனவே இன்றைய ஆட்சியில் அரச சார்பற்ற நிறுவனங்கள் தமக்கு தேவையான விதத்தில் இயங்குகின்றன. இது நாட்டில் பயங்கரமான சூழ்நிலைகளைத் தோற்றுவிக்கும். கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக நாட்டில் இரத்த ஆறு ஓடியது. இனங்களுக்கு இடையே பிரச்சினைகள் தலைதூக்கிக் காணப்பட்டன.
அந்நிலை நாட்டில் மீண்டும் ஏற்படலாகாது. அவ்வாறு ஏற்படுவது சாபமாகும். எனவே ஞானசார தேரரின் மதவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அடிப்படை வாதத்தை அடிப்படைவாதத்தால் தோல்வியடையச் செய்ய முடியாது. அடிப்படை வாதத்தை அஹிம்சை மூலமே தோல்வியடையச் செய்ய முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM