15 பேரின் உடல்­நிலை கவ­லைக்­கிடம்

16 Nov, 2015 | 02:08 PM
image

தமது விடு­தலையை வலி­யு­றுத்தி உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை தொடர்ந்து கொண்­டி­ருக்கும் தமிழ் அர­சியல் கைதிகள் அனை­வரினதும் உடல் நிலை­மை மோச­
ம­டைந்­துள்ள நிலையில் 15பேரின் நிலைமை கவ­லைக்­கி­ட­மா­கி­யுள்­ள­தாக சிறைச்­சாலை தக­வல்கள் தெரி­வித்­துள்­ளன. 

நேற்று முன்­தினம் நண்­ப­க­லிலி­ருந்து மருத்துவ உத­விகள் அனைத்­தையும் நிரா­க­ரிப்­ப­தாக உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் தமிழ் அர­சியல் கைதிகள் அறி­வித்­தி­ருந்த நிலையில் எட்­டா­வது நாளா­கவும் நேற்­றைய தினம் தமது போராட்­டத்தை தொடர்ந்­தி­ருந்­தனர்.

இந்­நி­லையில் நேற்­றைய தினம் உடல் நிலை சோர்­வ­டைந்­தி­ருந்த மேற்­கு­றித்த 15பேரின் நிலைமை கவ­லைக்­கி­ட­மா­னது.அத­னை­ய­டுத்து சிறைச்­சாலை வைத்­தி­யர்­களால் வழங்­கப்­பட்ட உட­னடி மருத்­துவ உத­வி­க­ளையும் இவர்கள் ஏற்க மறுப்­புத்­தெ­ரி­வித்­த­தாக சிறைச்­சாலைத் தக­வல்கள் மேலும் தெரி­வித்­துள்­ளன.

அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில்,

தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள மரி­ய­சீலன், சிவ­சீலன், தவ­ரூபன், ஜெயக்­குமார், மகசின் சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள, தர்ஷன், திரைப்­ப­டக்­கூட்­டுத்­தா­ப­னத்தின் முன்னாள் பணிப்­பாளர்(தமிழ்­பி­ரிவு), கன­க­சபை தேவ­தாஸன், கிருஷ்­ண­காந்தன், தன­யுகன், பிர­பா­கரன், யாழ்.சிறைச்­சா­லை­யி­லுள்ள விஷால் இரத்­தினம் பூபா­ல­சிங்கம், மட்­டக்­க­ளப்பு சிறைச்­சா­லை­யி­லுள்ள முர­ளி­தரன், யோக­ராஜா, தும்­பறை போகம்­பரைச் சிறைச்­சா­லை­யி­லுள்ள கைதி­யொ­ருவர் உள்­ளிட்ட 15பேரே உடல் நிலை கவ­லைக்­கி­ட­மான நிலையை அடைந்­துள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

இம்­மாதம் ஏழாம் திக­திக்கு முன்­ன­தாக தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்­பாக உரிய தீர்வு வழங்­கு­வ­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வாக்­கு­றுதி அளித்­தி­ருந்த போதும் அவ்­வாக்­கு­றுதி நிறை­வேற்­றி­ருக்­கப்­பட்­டி­ருக்­கா­ததன் கார­ண­மாக மறு­தி­ன­மான 8ஆம் திகதி மீண்டும் சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை கைதிகள் ஆரம்­பித்­தி­ருந்­தனர்.

நேற்று மாலை வரையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு உட்­பட பல அர­சியல் பிர­மு­கர்கள் உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் கைதி­களை நேரில் சென்று பார்­வை­யிடல், வடக்­கி­ழக்கில் பூரண ஹர்த்தால், கவ­ன­யீர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள், அர­சாங்­கத்­திடம் பல்வேறு கோரிக்கைகள் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளுக்கு ஆதரவான நடவடிக்கைள் சிறைச்சாலைக்கு வெளியில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்ற போதும் அரசாங்கத்தரப்பினால் தற்போது வரையில் உறுதியான வாக்குறுதிகள் எவையும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58