(ஆர்.யசி)
புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிலைப்பாட்டை ஆராய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் குழுவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். கட்சியின் மீள் மறுசீரமைப்பில் பொது எதிரணியை இணைத்துக்கொள்ளும் இறுதி வாய்ப்பு ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இரவு கூடியது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள் அனைவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஒன்றுகூடிய இந்த கூட்டத்தில் அரசியல் அமைப்பு திருத்தம், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை தேர்தலில் கட்சியின் நகர்வுகள், கட்சியின் மீள் கட்டமைப்பு பணிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய காரணிகள் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக புதிய அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் தமது யோசனைகளை முன்வைத்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மாத்திரம் தமது யோசனைகளை முன்வைக்கவில்லை. இந்நிலையில் புதிய அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் ஆராயப்பட்டதுடன் 20ஆம் திருத்தம் கொண்டு வருவதில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எவ்வாறு செயற்படவுள்ளது என்பதை ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, புதிய தேர்தல் முறைமை மற்றும் அதிகாரப்பரவலாக்கல் விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிலைப்பாட்டை ஆராயும் வகையில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பிலும் ஜனாதிபதியுடன் ஆராயப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தும் கால எல்லை கடந்துள்ள நிலையில் தேர்தலை நடத்த சகல கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றது. இந்நிலையில் ஜனாதிபதி மேற்கொள்ளவுள்ள தீர்மானங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் மாகாணசபை தேர்தலை நடத்துவது குறித்தும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயற்பாடுகள் தொடர்பிலும் கட்சியின் மத்தியகுழு ஆராய்ந்துள்ளது.
அதேபோல் கடந்த மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் மேற்கொள்ளவுள்ள ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துப் பரிமாற்றல்கள் இடம்பெற்றதுடன் கட்சியை மீள் மறுசீரமைப்பு மேற்கொள்ளும் செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது. அதேபோல் பொது எதிரணியினர் தொடர்ந்தும் தனித்து செயற்பட்டு வரும் நிலையில் கட்சியுடன் இணைத்துக்கொள்ள மேற்கொள்ளும் இறுதி நகர்வுகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி மத்தியகுழு உறுப்பினர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM