முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் மகளான துலாஞ்சலி ஜெயக்கொடிக்கு போலி நாணயத்தாள்களை வழங்கிய சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், குற்றத்தை ஒப்புக் கொண்ட குறித்த நபருக்கு ஐந்து இலட்சம் ரூபா அபராதமும் பாதிக்கப்பட்ட துலாஞ்சலிக்கு 20 இலட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் திகதி கொழும்பு பார்க் வீதியில் போலி நாணயத்தாள்களை வைத்திருந்தமை மற்றும் அவற்றை அச்சிடப் பயன்படுத்திய இயந்திரத்தை அதுல்கோட்டை பகுதியில் வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் இவருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தன.
அத்துடன், குற்றவாளி 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் 503ஐ முன்னாள் ஜனாதிபதியின் மகளுக்கு வழங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியை துலாஞ்சலி தனியார் வங்கியொன்றில் வைப்பிலிடச் சென்ற வேளையே அவை போலியானவை என அறியக்கிடைத்துள்ளது.
இதனையடுத்து, குற்றத்தை ஒப்புக் கொண்ட இவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM