முன்னாள் ஜனாதிபதியின் மகளுக்கு போலி நாணயத்தாள்களை கொடுத்தவருக்கு சிறை

Published By: Robert

23 May, 2017 | 10:34 AM
image

முன்னாள் ஜனா­தி­பதி ஆர்.பிரே­ம­தா­சவின் மக­ளான துலாஞ்சலி ஜெயக்­கொ­டிக்கு போலி நாண­யத்­தாள்­களை வழங்­கிய சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய நப­ருக்கு ஐந்து வரு­டங்களுக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்ட இரண்டு வருட சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. 

மேலும், குற்­றத்தை ஒப்புக் கொண்ட குறித்த நப­ருக்கு ஐந்து இலட்சம் ரூபா அப­ரா­தமும் பாதிக்­கப்­பட்ட துலாஞ்சலிக்கு 20 இலட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்­கு­மாறும் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது.

கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் திகதி கொழும்பு பார்க் வீதியில் போலி நாண­யத்­தாள்­களை வைத்­தி­ருந்­தமை மற்றும் அவற்றை அச்­சிடப் பயன்­ப­டுத்­திய இயந்­தி­ரத்தை அதுல்­கோட்டை பகு­தியில் வைத்­தி­ருந்­தமை போன்ற குற்­றச்­சாட்­டுக்கள் இவ­ருக்கு எதி­ராக சுமத்­தப்­பட்­டி­ருந்­தன. 

அத்­துடன், குற்­ற­வாளி 5000 ரூபா போலி நாண­யத்­தாள்கள் 503ஐ முன்னாள் ஜனா­தி­ப­தியின் மக­ளுக்கு வழங்­கி­யுள்ளார். அதன் ஒரு பகு­தியை துலாஞ்சலி தனியார் வங்­கி­யொன்றில் வைப்­பி­லிடச் சென்ற வேளையே அவை போலி­யா­னவை என அறி­யக்­கி­டைத்­துள்­ளது. 

இத­னை­ய­டுத்து, குற்­றத்தை ஒப்புக் கொண்ட இவ­ருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13