பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சாமியாரின் ஆணுறுப்பை துண்டித்த பெண்ணின் செயலை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பாராட்டியுள்ளார்.
திருவனந்தபுரம் அருகே உள்ள பேட்டை பகுதியை சேர்ந்த 23 வயது சட்டக்கல்லூரி மாணவியின் தந்தை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் இந்த குடும்பத்துக்கு, கணேசானந்தா தீர்த்தபாடம் என்கிற ஹரிசுவாமி (54 வயது) என்ற சாமியார் சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகமானார். அடிக்கடி இளம்பெண்ணின் வீட்டுக்கு வந்த அவரை நம்பி இப்பெண்ணின் தாயார் தனது வீட்டில் அடிக்கடி பூஜை செய்துள்ளார்.
கடந்த 6 வருடங்களாக அந்த வீட்டுக்கு சென்று பூஜைகள் செய்து வந்த சாமியார், குறித்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பில் தன் தாயாரிடம் அப்பெண் தெரிவித்த போதிலும் அவர் அதை கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது.
இதையடுத்து சாமியாருக்கு தண்டனை கொடுக்க முடிவு செய்த இளம்பெண். நேற்று முன்தினம் இரவில் சாமியார் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டபோது கத்தி ஒன்றை எடுத்து சாமியாரின் ஆணுறுப்பை வெட்டியுள்ளார். இரத்த வெள்ளத்தோடு அங்கிருந்து தப்பியோடிய சாமியார் தன் சீடர் ஒருவரின் உதவியோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் தானே தனது ஆணு றுப்பை அறுத்துக்கொண்டதாக அந்த சாமியார் தெரிவித்துள்ளார். இளம் பெண் ணின் இந்த துணிச்சலானசெயலுக்கு பலர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், இச் செயல் துணிச்சலானது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முனைவோருக்கு இது எச்சரிக்கை’ என்று கூறியுள்ளார். வரும் காலங்களில் பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள இதுபோன்ற துணிச் சலான செயல்களில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM