(ந.ஜெகதீஸ்)
நாடளாவிய ரீதியில் கடும் மழை மற்றும் இடியுடன் கூடிய வானிலை இன்றும் பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வெப்பமான காலநிலை நிலவிய கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் தற்போது தொடர்ச்சியான மழை வீழ்ச்சி பதிவாகி வருகின்றது. இது தொடர்பில் வளி மண்டலவியல் திணைக்கள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாடளாவிய ரீதியில் இன்றும் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர் பார்க்கப்படுகின்றது. அதனடிப்படையில் மேல், சப்ரகமுவ, வடமேல், தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் குறித்த மழை வீழ்ச்சி பதிவாகும் என எதிர் பார்க்கப்படுகின்றது. இவ்வாறு மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அதிக காற்றும் வீசக்கூடும் நிலை காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல், தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்திலும் காற்று வீசும் எனவும் தெற்கு,தென்கிழக்கு, வட மேற்கு போன்ற கடற்பிரதேசங்களில் மணிக்கு 60 கிலோமீற்றர் முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை கடுமையான இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மக்கள் மின்னல் தாக்கங்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அத்திணைக்களத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாகபெய்த கடும் மழைக்காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் பல அனர்த்தங்கள் இடம்பெற்றிருந்தன.
அத்துடன் மலைப்பாங்கான இடங்களில் மண்சரிவு மற்றும் தாழ்வு நில பிரதேசங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்படும் அபாயமும் காணப்படுகின்றது. அதிகமான மழை மற்றும் மேக மூட்டத்துடனான கால நிலை இருக்கும் சந்தர்ப்பங்களில் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறும் வளிமண்டல திணைக்களத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM