பாலியல் குற்றம் சுமத்தப்பட்டு, குற்றமே செய்யாமல் கடந்த 7 வருடங்களாக கைதியை போல் வாழவைத்த, சுவீடன் அதிகாரிகளை தன்னால் மன்னிக்கவோ, மறக்கவோ முடியாதென விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே தெரிவித்துள்ளார்.
அசாஞ்சே மீது 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பலாத்கார குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை கைவிடப்போவதாக சுவீடன் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த அறிவிப்பை தொடர்ந்து சமூக வலைத்தளம் மூலம் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
உலகை அதிர செய்த அமெரிக்க வெளியுறவுக்கொள்கை மற்றும் உலக அரசியல் சார் ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே வெளியிட்டதையடுத்து அவர் மீது பலவிதமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இந்நிலையில் அவரை கைது செய்வதற்கான முயற்சியை அமெரிக்கா மேற்கொள்ளவே, அவர் சுவீடனின் தலைநகர் ஸ்டொக்ஹோம் நகருக்கு செல்லவே, அந்நாட்டு அரச அதிகாரிகள் அவருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை எழுப்பி வழக்கு பதிவு செய்தனர்.
குறித்த வழக்கு காரணமாக ஏற்படுத்தப்பட்ட கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக, லண்டன் சென்ற ஜூலியன் அசாஞ்சே, அங்குள்ள ஈக்குவடார் தூதரகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் அரசியல் தஞ்சம் புகுந்து கைது செய்வதிலிருந்து விடுபட்டிருந்தார்.
மேலும் அசாஞ்சே மீதான பாலியல் வழக்கு விசாரணையை, சுவீடன் கைவிடும் முடிவை ஈக்குவடார் வரவேற்றுள்ளது. அத்தோடு அவரை பாதுகாப்பாக வெளியே அனுப்பவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
சுவிடனின் முடிவை தொடர்ந்து, ஈக்குவடார் தூதரகத்தை விட்டு வெளியேறும் அசாஞ்சே, ஈக்குவடார் செல்வதாகவும்,, பிரான்ஸில் அரசியல் தஞ்சமடைய விரும்புவதாகவும் தகவல்கள் பகிரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM