தாய்லாந்திலிருந்து 202 பயணிகளுடன் டோஹா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கட்டார் விமான சேவைகள் நிறுவனத்திற்குச் சொந்தமான “கிவ். ஆர்.841” என்ற விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக அவ்விமானம் நேற்றிரவு 8.30 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
குறித்த விமானத்திற்குள் தீ ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டதனாலேயே அவ்விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானம் அல்ல. எனினும் டோஹா நோக்கி பயணித்துக்கொண்டிருந்தபோது இலங்கை வான்பரப்பில் வைத்து விமானத்திற்குள் தீ அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே அபாய நிலையை கருத்திற்கொண்ட விமானி பாதுகாப்பான முறையில் விமானத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளார்.
கட்டுநாயக்க விமானநிலையத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு தீயணைப்பு வாகனம் மற்றும் அம்பியூலன்ஸ் வண்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் 202 பயணிகளுடன் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM