ஆசிய றக்பித் தொடரில் தனது மூன்றாவது போட்டியில் தொடரை நடத்தும் மலேஷிய அணியை அவர்களின் சொந்த மைதானத்தில் இன்று எதிர்த்தாடுகிறது இலங்கை றக்பி அணி.
ஆசிய றக்பித் தொடரின் டிவிஷன் – 1 போட்டிகள் மலேஷியாவில் தற்போது நடைபெற்றுவருகின்றன.
இந்தத் தொடரில் விளையாடிவரும் இலங்கை அணி தனது திறமையான ஆட்டத்தினால் இதற்கு முதல் மோதிய இரண்டு போட்டிகளிலும் அபாரமாக வெற்றிகொண்டிருந்தது.
இலங்கை அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிகொண்டிருந்த பிலிப்பைன்ஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் மிகவும் பலம்பொருந்திய அணிகளாக வலம் வந்தவை.
அந்த அணிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இலங்கை அணி விளையாடியிருந்தது.
இந்நிலையில் ஆசிய றக்பித் தொடரை நடத்தும் மலேஷிய அணியை அவர்களின் சொந்த மைதானத்தில் சொந்த ரசிகர்கள் மத்தியில் இலங்கை அணி எதிர்த்தாடுகின்றது.
இந்தப் போட்டியிலும் இலங்கை அணி நிச்சயம் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM