அம்பலாந்தொட்ட துப்பாக்கிச்சூடு :  சந்தேக நபர்கள் மூவர் கைது!

Published By: Ponmalar

17 May, 2017 | 12:22 PM
image

அம்பலாந்தொட்ட - மாமடல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்களை நேற்று பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபர்களை சமாதிகம பகுதியில் வைத்து  தங்காலை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் லுனம பிரதேசத்தைச் சேர்ந்த 28 தொடக்கம்  49 வயதுக்கிடைப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மாதம் 15 ஆம் திகதி எலேகொட பகுதியில் நடைபெற்ற விருந்துபசார நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் தூப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டனர்.

இதில் ஒருவர் உயிரிழந்திருந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46