சட்டரீதியற்ற கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக வெளிநாடு செல்ல முற்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று நீர்கொழும்பு மேலதிக நீதிவான் கபில துஸ்ஸந்த எபிட்டவல முன்னிலையில் விசாரணைக்கு வந்தது,
விடயங்களை ஆராய்ந்த நீதிவான் வழக்கின் விசாரணை நடவடிக்கைகளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மன்றில் ஆஜராகியிருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க தலைமையிலான சட்டத்தரணிகள் மன்றில் ஆஜரானார்கள்
முறையற்ற கடவுச் சீட்டைப் பயன்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வெளிநாடு செல்ல வருகை தந்தபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் திகதி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM