ஞான­சார தேரருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

Published By: Robert

17 May, 2017 | 11:20 AM
image

ஞான­சார தேரரின் இன­வாத கருத்­துக்கள் மற்றும் சம­யத்தை இழி­வு­ப­டுத்­து­கின்­ற­மைக்கு எதி­ராக நேற்று பொலிஸ் தலை­மை­ய­கத்தில் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்­மா­னினால் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. 

இதன்­போது கருத்துத் தெரி­வித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர், மீண்டும் இந்­நாட்டில் இன­வா­தத்தை தூண்ட ஒரு­சில சக்­திகள் முயற்சி செய்­கின்­றன. முக்­கி­ய­மாக ஞான­சார தேரர் இந்­நாட்டை பிரிக்கும் செயற்­பாடுகளிலும் 2005 ஆம் ஆண்­டுக்கு முன்னர் இருந்­ததை போன்று மக்­க­ளி­டத்தில் இன­வா­தத்தை பரப்பும் நட­வ­டிக்­கை களில் ஈடு­பட்டு வரு­கிறார்.

ஒரு சமயத் தலைவர் எவ்­வி­த­மான பொறுப்­பு­ணர்வு­ மின்றி இந்­நாட்டு மக்­களின் மனங்­களை கொடூர எண்­ணங்­களை விதைக்கும் வகையில் கருத்­துக்­களை வெளி­யி­டு­வது மிகவும் வேத­னை­யான விட­ய­மாகும். தற்­போது மீண்டும் அவ­ரது இன­வாத கருத்­துக்­களை கொண்டும் சமய பிரி­வி­னை­வா­தத்தை கொண்டும் இந்­நாட்டு மக்­களை பழி­வாங்க முனை­கின்றார். இதற்­கெதி­ரா­கவே பொலிஸ் நிலை­யத்தில் முறை­யிட வந்தோம். 

அனைத்து மக்­க­ளையும் பாது­காப்­ப­தா­கவும் அனைத்து மதத்­துக்கும் சம அந்­த­ஸ்து வழங்­கு­வ­தா­கவும் உறு­தி­ய­ளித்தே நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­தது. இவ்­வா­றி­ருக்­கையில் தற்­போது மீண்டும் பிரி­வி­னை­வா­தத்தை ஆரம்­பித்­தி­ருக்கும் ஞான­சார தேரரின் செயற்­பா­டு­களை கண்­டிக்க வேண்டும், சம­யத்தை கொண்டு ஏனை­யோரை தண்­டிக்கும் செயற்­பாட்டை அவர் உட­ன­டி­யாக நிறுத்த வேண்டும் என பொலிஸ்மா அதி­ப­ரிடம் கோரிக்கை விடுக்­கின்றோம். 

அவ்­வாறு பொலிஸ்மா அதிபர் நீதியை நிலை­நாட்­டா­விட்டால் தொடர்ந்து கடு­மை­யான எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுவோம் என்­பதை தெரி­வித்­துக்­கொள்­கின்றோம். வெல்­லம்­பிட்­டிய கொஹி­ல­வத்தை பள்­ளி­வா­ச­லுக்கும் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. ஞான­ சார தேரர் பொல­ன­று­வையில் கூறி­ய­தைப்போன்று கொடி­கா­வத்தை சம்­ப­வத்­துக்கும் அவ­ருக்கும் சம்­                  பந்தம் உள்­ளது என்றே தோன்­று­கின்­றது. மீண்டும் இன­வா­தத்தை தூண்டி சமய பிரசாரங்களை கொடூரமான வகையில் மக்களிடத்தில் கொண்டு செல்லும் போக் கினை உடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறில் லாவிட்டால் இனிவரும் எதிர்ப்பு செயற்பாடுகள் மிக வும் மோசமானதாக இருக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:20:29
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54