யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவமொன்றில் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட எட்டுப் பேரில் மூவருக்கு மூன்றாண்டு கடூழிய சிறைத் தண்டனையும், ஏனைய ஐவருக்கு ஓராண்டு கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2012ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது. இச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்திருந்தார். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மாணவர்கள் இருவர் உட்பட எட்டுப் பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணையானது தொடர்ச்சியாக இடம்பெற்று வந்திருந்தது. இவ் வழக்கு விசாரனையில் எட்டு பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வழக்கு தவனையின் போது வழக்கின் தீர்ப்புக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த வழக்கானது நேற்றைய தினம் தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த வாள்வெட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட எட்டு பேரில் 1ஆம் 2ஆம் 8ஆம் எதிரிகளுக்கு மூன்றாண்டு கடூழிய சிறைத் தண்டனையும், ஏனைய ஜந்து எதிரிகளுக்கும் ஒராண்டு கடூழிய சிறைத் தண்டனையும் விதித்ததுடன் எட்டுப் பேருக்கும் ஒவ்வொருவரும் தலா 50ஆயிரம் ரூபா இழப்பீடு செலுத்தவும் யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் சதீஸ்கரன் உத்தரவிட்டிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM