மன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்ற முன்னாள் நீதிபதியை தொலைபேசி மூலம் மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக மன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றுவரும் வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது,
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு மன்னார் நகர் கோந்தப்பிட்டி கடற்கரை சம்பந்தமாக இரு சாராருக்கிடையே நிலவிய வழக்கு சம்பந்தமாக வன்னித் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் வர்த்தக மற்றும் வாணிபத்துறை அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அன்றைய அவ் வழக்கின் விசாரணையை மேற்கொண்ட மன்னார் மாவட்ட நீதிவான் ஜூட்சனை தொலைபேசியினூடாக அச்சுறுத்தியதாக தெரிவித்து அமைச்சருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவ் வழக்கு நேற்று திங்கட்கிழமை மன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது அமைச்சர் மன்றில் ஆஜராகியிருந்தார். இவ் வழக்கு சம்பந்தமாக சட்டமா அதிபரிடமிருந்து இன்னும் அறிக்கை கிடைக்கப் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ் வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM