பாடசாலை சிறுவன் ஒருவனை பல தடவைகள் பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்த 28 வயது பெண்ணுக்கு மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து அனுராதபுர மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. அனுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் இந்த தீர்ப்பிணை வழங்கினார்.
அனுராதபுரம் பேமமடுவ - அலிவங்குவ பகுதியைச் சேர்ந்த பிரியங்கிகா சமன் குமார எனும் 28 வயதான, இராணுவ வீரர் ஒருவரின் மனைவிக்கே இந்த தண்டனை தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதிக்கும் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மஹவிலச்சிய பகுதியில் வைத்து பல்வேறு சந்தர்ப்பங்களில் குறித்த பாடசாலை சிறுவனை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்கள் சட்ட மா அதிபரினால் குறித்த பெண் மீது சுமத்தப்பட்டிருந்தன.
குறித்த பெண்ணின் கணவன் இராணுவ வீரர் என்ற ரீதியில் மாதத்தில் ஒரு நாளே வீட்டுக்கு வரும் நிலையில் ஏனைய நாட்களில் குறித்த பெண் குறித்த மாணவனின் வீட்டுக்கு சென்றே இரவில் உறக்கம் கொண்டுள்ளார். இந் நிலையில் சில நாட்களில் அவர் குறித்த மாணவனை அவரது வீட்டுக்கு அழைத்து வந்தும் இரவில் தங்கியுள்ளார். இதன் போதே அவர் மாணவனை அந்த பெண் பாலியல் ரீதியில் பலாத்காரம் செய்துள்ளதாக வழக்கு விசாரணையின் போது சுட்டிக்காட்டப்பட்டது.
எனினும் பொலிஸாருக்கும் நீதிமன்றுக்கும் குறித்த பெண் வழங்கிய சாட்சியத்தில் குறித்த சிறுவனே தனிமையில் இருந்த தனக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இந் நிலையில், குறித்த பெண்ணுக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுக்களும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படுவதாக அறிவித்த நீதிமன்றம் அப்பெண்ணுக்கு தண்டனையை நேற்று அறிவித்தது.
இதன் போது மூன்று குற்றச்சாட்டுக்களுக்கும் எதிராக தனித்தனியாக மும்மூன்று வருடங்கள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்ட போதும், குற்றவாளியான பெண் கர்ப்பமுற்றிருப்பதை மையப்படுத்தி, தண்டனையை ஒரே தடவையில் மூன்று வருடங்களில் அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைவிட ஒவ்வொரு குற்றச்சாட்டு தொடர்பிலும் 500 ரூபா தண்டப்பணம் விதித்த நீதிவான் அதனைசெலுத்த தவறின் ஒவ்வொரு குற்றச்சாட்டு தொடர்பிலும் தலா ஒரு மாத இலகு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் எனவும் நீதிபதி எச்சரித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM