ஏன் இப்படி ஒரு பழக்கம்? : குழந்தைக்காக மட்டுமே ஆண்கள்

Published By: Robert

16 May, 2017 | 10:37 AM
image

தன்­சா­னியா பழங்­கு­டி­யின மக்­க­ளிடம் ஓர் விசித்­தி­ர­மான பாரம்­ப­ரிய பழக்கம் இருப்­ப­தாக அறிக்­கை­கள் கூறு­கின்­றன. அது என்­ன­வெனில், பெண்கள் மற்ற பெண்­களை திரு­மணம் செய்து கொள்­வது.

வடக்கு தன்­சா­னி­யாவின் நியா­மோங்கோ கிரா­மத்தில் உள்ள குரிய பழங்­கு­டி­யி­னத்தைச் சேர்ந்த பெண்கள் மற்ற பெண்­களை திரு­மணம் செய்து கொள்­வார்கள். உள்ளூர் பாரம்­ப­ரி­யத்தின் படி, இந்த பழங்­கு­டி­யின பெண்கள் மற்ற பெண்­களை திரு­மணம் செய்து கொள்ளும் முன், ஒரு ஆணை திரு­மணம் செய்து குழந்தைப் பெற்றுக் கொள்­வார்­களாம். அதுவும் குழந்­தைக்­காக மட்­டுமே ஆண்­களை திரு­மணம் செய்து கொள்­வார்­களாம். திரு­ம­ண­மான தம்­ப­திகள் இந்த பழங்­கு­டி­யின பெண்கள் மற்ற பெண்­களை திரு­மணம் செய்து கொண்ட பின், ஒரே வீட்டில் தான் வாழ்ந்து வரு­வார்­களாம். இந்த பழங்­கு­டி­யி­ன­ருக்கு ஓரினச் சேர்க்­கை­யா­ளர்­களைப் பற்றி தெரி­யாது. ஆகவே உட­லு­றவில் ஈடு­ப­ட­மாட்­டார்­களாம். பெண்கள் தான் தனக்­கான ஆணை தேர்ந்­தெ­டுப்­பார்கள். இந்த பழங்­கு­டி­யி­னரின் வழக்­கப்­படி, பெண்கள் தனக்­கான ஆண் துணையைத் தேர்ந்­தெ­டுப்­பார்­களாம். அதுவும் குழந்தைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக மட்­டுமே. குழந்தை பிறந்த பின், ஆண்­களும் தந்­தைக்­கான உரி­மையை எடுத்துக் கொள்­ளாமல் விட்டு சென்­று­வி­டு­வார்­களாம். பின் பெண்கள் மற்ற பெண்­களை திரு­மணம் செய்து, இரு­வரும் சேர்ந்து குழந்­தையை வளர்ப்­பார்­களாம். 

இந்த பழங்­கு­டி­யினர் இப்­ப­டி­யொரு பழக்­கத்தைக் கொண்­டி­ருப்­ப­தற்கு காரணம், சொத்து தன்னை விட்டு செல்­லக்­கூ­டாது என்­ப­தற்­கா­கவாம். ஒரு­வேளை குழந்தை இல்­லாத பெண்கள், தன் சொத்தை பாதுகாப்பதற்கு மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறுகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right