தன்சானியா பழங்குடியின மக்களிடம் ஓர் விசித்திரமான பாரம்பரிய பழக்கம் இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. அது என்னவெனில், பெண்கள் மற்ற பெண்களை திருமணம் செய்து கொள்வது.
வடக்கு தன்சானியாவின் நியாமோங்கோ கிராமத்தில் உள்ள குரிய பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்கள் மற்ற பெண்களை திருமணம் செய்து கொள்வார்கள். உள்ளூர் பாரம்பரியத்தின் படி, இந்த பழங்குடியின பெண்கள் மற்ற பெண்களை திருமணம் செய்து கொள்ளும் முன், ஒரு ஆணை திருமணம் செய்து குழந்தைப் பெற்றுக் கொள்வார்களாம். அதுவும் குழந்தைக்காக மட்டுமே ஆண்களை திருமணம் செய்து கொள்வார்களாம். திருமணமான தம்பதிகள் இந்த பழங்குடியின பெண்கள் மற்ற பெண்களை திருமணம் செய்து கொண்ட பின், ஒரே வீட்டில் தான் வாழ்ந்து வருவார்களாம். இந்த பழங்குடியினருக்கு ஓரினச் சேர்க்கையாளர்களைப் பற்றி தெரியாது. ஆகவே உடலுறவில் ஈடுபடமாட்டார்களாம். பெண்கள் தான் தனக்கான ஆணை தேர்ந்தெடுப்பார்கள். இந்த பழங்குடியினரின் வழக்கப்படி, பெண்கள் தனக்கான ஆண் துணையைத் தேர்ந்தெடுப்பார்களாம். அதுவும் குழந்தைப் பெற்றுக் கொள்வதற்காக மட்டுமே. குழந்தை பிறந்த பின், ஆண்களும் தந்தைக்கான உரிமையை எடுத்துக் கொள்ளாமல் விட்டு சென்றுவிடுவார்களாம். பின் பெண்கள் மற்ற பெண்களை திருமணம் செய்து, இருவரும் சேர்ந்து குழந்தையை வளர்ப்பார்களாம்.
இந்த பழங்குடியினர் இப்படியொரு பழக்கத்தைக் கொண்டிருப்பதற்கு காரணம், சொத்து தன்னை விட்டு செல்லக்கூடாது என்பதற்காகவாம். ஒருவேளை குழந்தை இல்லாத பெண்கள், தன் சொத்தை பாதுகாப்பதற்கு மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM