இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையின் போது அவர் ஆற்றிய உரையினால் இலங்கையின் சுயாதீனத் தன்மைக்கு பெரும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
மலையகத்தில் 10 ஆயிரம் வீடுகள் அமைப்பது குறித்து பேசிய போது அவர் இந்திய பிரதமரா அல்லது இலங்கை பிரதமரா என்ற கேள்வியே எழுந்தது. அதனால் இலங்கையை
இந்தியாவின் 30 ஆவது பிராந்தியமாக்குவதற்கான முனைப்புக்களே தெரிந்தன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தூய்மையான நாளைக்கான அமைப்பின் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும், தெரிவிக்கையில்,
மோடியின் வருகை வரலாற்று ரீதியிலான பாரம்பரிய உறவை கட்டியெழுப்புவதாக மாத்திரமே அமையும் என்று அரசாங்கம் கூறியது. ஆனால் அவரின் வருகையின் பின்பான செயற்பாடுகள் வேறுபட்ட கருத்துக்களையே தோற்றுவிக்கின்றது.
அவர் சர்வதேச வெசாக் தினத்தின் விசேட விருந்தினர் என்றால் அவரின் கருத்துக்கள் அதுபற்றியதாகவே அமைந்திருக்க வேண்டும். ஆனால் அவரின் பேச்சு இலங்கை – இந்திய உறவு பற்றியதாகவே அமைந்திருந்தது.
அவரின் பேச்சு இலங்கை மற்றும் இந்தியாவுகிடையிலான முத்தரப்பு சந்திப்பு போன்றே அமைந்தது. அவரின் கருத்து முழுவதும் அரசியல் சார்ந்த காரணிகளையே வெளிப்படுத்தியது. இருநாடுகளினதும் எல்லைகளில் தொழில்நுட்பம் ஊற்றெடுக்க வேண்டும் என்கிறார். அதனூடாக எட்கா ஒப்பந்தத்தினை உடனடியாக கைச்சாத்திட வேண்டும் என்பதையே மறைமுகமாக கூறுகின்றார்.
காரணம் எட்கா கைச்சாத்திடப்படாத காரணத்தினாலேயே தற்போதுவரையில் இலங்கை – இந்திய எல்லையில் வியாபாரச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாமல் உள்ளது. அதேநேரம் இலங்கையினதும் இந்தியாவினதும் சமூகங்களின் பாதுகாப்புக்களை வேறுபடுத்தி பார்க்க முடியாது என கூறினார். இதனால் இலங்கை நினைத்தாற் போல் நடந்துகொள்ள முடியாது. பாதுகாப்பு விவகாரத்தில் எம்மைக் கேட்காமல் காய் நகர்த்த முடியாது என்பதையே கூறுகின்றார்.
இது இலங்கையின் சுயாதீன தன்மைக்கு விடுக்கப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தல். மேலும் அடித்தள கட்டமைப்புக்களில் ஒருங்கிைணப்புச் செயற்பாடுகளை முன்னெடுப்போம் என்றும் கூறினார். ஒருங்கிணைப்புச் செயற்பாடு என்பது ஹனுமான் பாலத்தை அமைப்போம் என்பதையே சுட்டிக்காட்டுகின்றது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி டிக்கோயா சென்ற போது பேசிய விடயம் குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும். குறிப்பாக இந்திய அம்புலன்ஸ் சேவையினை நாடு முழுவதும் விஸ்தரிப்புச் செய்வேன் என்றும் மலையகத்தில் 10 ஆயிரம் வீடு களை அமைத்துக்கொடுப்பேன் என்றும் கூறியிருந்தார்.
இலங்கையில் அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க அவருக்கு என்ன அதிகாரம் உள்ளது? அவர் இலங்கையின் பிரதமரும் அல்லாத போது அவர் அவ்வாறு கூறுவது இலங்கையை இந்தியாவின் 30 ஆவது பிராந்தியமாக இணைத்துக்கொண் டார் என்பது போலவே இருந்தது.
ஜனாதிபதியை இலங்கை என்ற பிராந்தியத்தின் ஆளுனராகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அதன் முதலமைச்சராகவும் எண்ணிக்கொண்டுதான் இந்திய பிரதமர் உரையாற்றினார் என்பது தெளிவாகின்றது.
மேலும் இந்தியா இலங்கையை தனது காலனித்துவத்தின் கீழ் கொண்டுவர முயற்சிக்கின்றது என அந்நாட்டு பிரதம ரின் இலங்கை விஜயத்தின் போது வெளிப்படையானது. கவலையாக இருப்பினும் இந்த விடயத்தினை குறிப்பிட் டாக வேண்டிய தேவை உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM