330 அரியவகை ஆமைகளை கைப்பற்றியுள்ள சுங்கத்துறையினர் : மலேசிய விமானநிலையத்தில் சம்பவம்..! 

Published By: Selva Loges

15 May, 2017 | 03:53 PM
image

உலகில் மிகவும் அறியதும், ஆபத்தான நிலையில் உள்ள ஆமையினமாக அறிவிக்கப்பட்டுள்ள 330 ஆமைகளை கோலாலம்பூர் சர்வதேச விமான நிலைய சுங்கப்பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

உலகில் ஆபத்து நிறைந்த ஆமைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் மலேசிய சுங்கத்துறை அதிகாரிகள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மடகஸ்கர் தீவிலிருந்து கடத்திவரப்பட்டுள்ள சுமார் 5 கோடி பெறுமதியுள்ள 330 அரிய ஆமைகளை பறிமுதல் செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் பிடிக்கப்பட்ட ஆமைகள் அனைத்தும் கதிர்விச்சு பாய்ச்சலுக்குட்பட்ட நிலையில், மேலோடுகள் மிகவும் அழகாக இருப்பதோடு, இவற்றின் தோற்றம் காரணமாக சர்வதேசமளவில் குறித்த ஆமைகளுக்கான கேள்விகள் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமாய் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right