இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உறவில் முக்கியமான ஒரு சந்தர்ப்பத்தில் நாம் இப்போது உள்ளோம். பல்வேறு துறைகளிலும் காணப்படும் எமது பங்குடமையில் உயர்வான நிலையை எட்ட வேண்டிய வாய்ப்பு தற்பொழுது கிட்டியுள்ளது. அத்துடன் எம்மைப் பொறுத்தவரை எமது நட்பின் வெற்றியாக தங்களின் முன்னேற்றத்தையும் வெற்றியையுமே கருதுகின்றோம் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இன்றி வர்த்தகம், முதலீடுகள், தொழில்நுட்பம், சிந்தனைகள், எல்லைகளைக் கடந்து பரஸ்பர நலன்களுக்காக பயணிப்பதனை நாம் நம்புகின்றோம். இந்தியாவின் துரிதமான வளர்ச்சி மூலம் இலங்கை உட்பட முழுப் பிராந்தியமும் நன்மையடைய வேண்டும். மேலும் இந்து சமூத்திரத்தின் நீர்நிலையாக இருக்கலாம் அல்லது பூமியாக இருக்கலாம். எவ்வாறு இருப்பினும் எமது சமூகங்களினதும் பாதுகாப்பு பிரிக்கப்படமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
உங்கள் சமூகத்தின் முன்னேற்றம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்கான உண்மையான தெரிவுகளை மேற்கொள்ளும் நிலையில் தேசத்தைக் கட்டியெழுப்பும் உங்கள் பெரும் முயற்சிக்கு ஆதரவு வழங்கும் உண்மையான பங்களாராக நண்பராக நீங்களே இந்தியாவை கண்டுகொள்வீர்கள் என்றும் இந்திய பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் மோடி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற சர்வதேச வெசாக் தின நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
புனிதமான ஒரு தினத்தில் இங்கு உரையாற்றுவதற்கு என்னை அழைத்தமைக்காக இலங்கை மக்களுக்கும் ஜனாதிபதி, பிரதமருக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன். அதேவேளை, கௌரவமாகவும் இதனைக் கருதுகின்றேன்.
பௌத்தம் பிறந்த மண்ணில் வாழும் 1.25 பில்லியன் மக்களின் வாழ்த்துக்களையும் உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். எமது பிராந்தியம் உலகில் மிகவும் பெறுமதி நிறைந்த புத்தரின் பரிசையும் அவரின் போதனைகளையும் பெற்றிருப்பது சிறந்த அதிஷ்டமாகும்.
எமது ஆட்சி, கலாசாரம் ஆகிய அனைத்திலும் பௌத்தம் ஆழமாக பதிந்துள்ளது. எமது தேசிய இலட்சினையின் முக்கியமான பகுதிகள் பெள்தத்தின் உள்ளீடுகளில் இருந்து பெறப்பட்டவையாகும். உலகின் ஏனைய பகுதிகளுக்கு இந்தியாவில் இருந்து பௌத்தம் கொண்டு செல்லப்பட்டிருந்தது. மகிந்தவும் சங்கமித்தையும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தமது பயணத்தை மேற்கொண்டு பௌத்த மதத்தின் பெருமையை இங்கும் சேர்த்திருந்தனர்.
பௌத்தத்தை போதிக்கும் அல்லது கற்பிக்கும் முக்கிய மையமாக இலங்கை இன்று அமைந்திருக்கின்றது. பல நூற்றாண்டுகளின் பின்னர் அநராகரீக தர்மபாலவும் இதேபோன்ற ஒரு பயணத்தை மேற்கொண்டிருந்தார். எனவே இம்முறை இலங்கையிலிருந்து பௌத்தத்தின் உத்வேகத்தை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் இந்தியாவுள்ளது. மாற்று வழியில் நீங்கள் எம்மை எமது சொந்த வழிகளில் வழிநடத்துகின்றீர்கள் என்றுதான் கூறமுடியும்.
பௌத்தமானது இலங்கை மற்றும் இந்திய உறவின் முக்கிய கருப்பொருளாக காணப்படுகின்றது. அயலவர்களாக இருக்கும் எமது இரு நாடுகளினதும் உறவுமுறை பல்வேறு படிமங்கள் ஊடாக சென்றிருக்கின்றது.
சமூகங்களினதும் மக்களினதும் இதயங்களில் வாழும் உயர்ந்த நட்பாக எமது நட்பு இன்று காணப்படுகின்றது. எமது பௌத்த பெறுமானங்களின் தொடர்புகளை கௌரவப்படுத்தி மேலும் ஆழமாக்கும் வகையில் இந்த வருடம் ஆகஸ்ட் முதல் கொழும்புக்கும் வாரணாசிக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் ஏயார் இந்தியன்ஸ் விமான சேவையினால் ஆரம்பிக்கப்படும்.
அதனூடாக இலங்கையை சேர்ந்த சிங்கள சகோதர சகோதரிகள் பௌத்தரின் புனித பூமிக்கு இலகுவான பயணத்தினை மேற்கொள்ள முடியும். அதேபோல தமிழ் சகோதர சகோதரிகளும் வாரணாசிக்கும் காசி விஸ்வநாதரின் புனித பூமிக்கும் செல்லமுடியும்.
எமது உறவில் முக்கியமான ஒரு சந்தர்ப்பத்தில் நாம் தற்பொழுது உள்ளோம். பல்வேறு துறைகளிலும் காணப்படும் எமது பங்குடமையில் உயர்வான நிலையை எட்டவேண்டிய வாய்ப்பு தற்பொழுது கிட்டியுள்ளது. அத்துடன் எம்மைப் பொறுத்தவரை எமது நட்பின் வெற்றியாக தங்களின் முன்னேற்றத்தையும் வெற்றியையுமே கருதுகின்றோம்.
இலங்கையில் உள்ள சகோதர சகோதரிகளின் பொருளாதார செழுமையை உறுதிப்படுத்துவதில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். எமத அபிவிருத்தி ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேலும் ஆழமாக்குவதற்காக நேரடியான முதலீடுகளை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளோம்.
எமது மூலதனம் செழுமை புலமை ஆகியவற்றையும் பகிர்ந்து கொள்வதில் தான் எமது பலம் தங்கியுள்ளது. முதலீடு மற்றும் வர்த்தகத்தில் ஏற்கனவே நாம் மிக முக்கியமான பங்களாராக இருக்கின்றோம். மிகவும் அதிகளவில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இன்றி வர்த்தகம், முதலீடுகள், தொழில்நுட்பம், சிந்தனைகள், எல்லைகளைக் கடந்து பரஸ்பர நலன்களுக்காக பயணிப்பதனை நாம் நம்புகின்றோம். இந்தியாவின் துரிதமான வளர்ச்சி மூலம் குறிப்பாக இலங்கை உட்பட முழுப் பிராந்தியமும் நன்மையடைய வேண்டும்.
உட்கட்டமைப்ப மற்றும் தொடர்பாடல், போக்குவரத்து மற்றும் சக்தி ஆகிய துறைகளில் எமது ஒத்துழைப்பினை மேலும் அதிகரிப்பதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது.
அதேபோல, விவசாயம், கல்வி, சுகாதாரம், மீள்குடியேற்றம், போக்குவரத்து, மின்சக்தி, கலாசாரம், நீர், வதிவிடம், விளையாட்டு மற்றும் மனித வளங்கள் போன்ற மனித செயற்பாடுகளின் ஒவ்வொரு பிரிவுகளிலும் எமது அபிவிருத்தி பங்குடமை பரந்து காணப்படுகின்றது.
இன்று இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அபிவிருத்தி ஒத்துழைப்பு 2.6 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியிருக்கின்றது. இலங்கை மக்கள் சமாதானம்இ செழுமை மற்றும் பாதுகாப்பு நிறைந்த எதிர்காலத்தினை பெற்றுக்கொள்வதனை இலக்காகக் கொண்டே இந்தியா தொடர்ந்தும் ஆதரவு வழங்கிவருகின்றது. ஏனென்றால் இந்தியாவில் வாழும் 1.25 பில்லியன் மக்களுடன் இலங்கை மக்கள் நேரடியான தொடர்பினை கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் பொருளாதார சமூக நலன்புரிகளும் பிணைந்தே காணப்படுகின்றது.
இந்து சமூத்திரத்தின் நீர்நிலையாக இருக்கலாம் அல்லது பூமியாக இருக்கலாம். எவ்வாறு இருப்பினும் எமது சமூகங்களினதும் பாதுகாப்பு பிரிக்கப்படமுடியாது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கஇ ஜனாதிபதி சிறிசேன ஆகியோருடன் மேற்கொண்டிருந்த சந்திப்பின் போது எமது பொதுவான இலக்குகளை எட்டிக்கொள்வதற்காக இரு தரப்பும் கரம் கோர்க்க வேண்டிய தேவையிருப்பதனை மீண்டும் வலியுறுத்தி கூறியிருந்தேன். உங்கள் சமூகத்தின் முன்னேற்றம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்கான உண்மையான தெரிவுகளை மேற்கொள்ளும் நிலையில் தேசத்தைக் கட்டியெழுப்பும் உங்கள் பெரும் முயற்சிக்கு ஆதரவு வழங்கும் உண்மையான பங்களாராக நண்பராக நீங்களே இந்தியாவை கண்டுகொள்வீர்கள்.
சமூக நீதியானது சமூகங்களுக்கு இடையிலான முரண்பாடுகளுடன் தொடர்புடைய விடயமாகும். இவ்வாறான நிலையில் வெசாக் தினத்துக்கான தொனிப்பொருளாக சமூக நீதி மற்றும் ஸ்திரமான உலக சமாதானம் என்பது தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது.
இவ்வாறான நிலையில் ஸ்திரமான உலகத்தின் சமாதானம் இரண்டு சேதங்களுக்கு இடையிலான முரண்பாடுகளில் அடிப்படையாக தங்கியிருக்கவில்லை. சிந்தனைஇ மனநிலைஇ வெறுப்பு மற்றும் வன்முறை போன்ற சிந்தனைகளில் ஊடுருவியிருக்கும் மறை பொருட்கள் ஆகியவற்றில்தான் உலக சமாதானம் தங்கியுள்ளது.
எமது பிராந்தியத்தில் காணப்படும் பயங்கரவாதத்தின் தோற்றத்தின் மூலம் இந்த கொடூரமான உணர்வின் பலமான பிரசாரத்தினை காணமுடியும். மிகவும் கவலை தரும் விடயமாக வெறுப்பு மற்றும் அவர்களின் செயற்பாடுகள் மூலம் பேச்சுக்களுக்கு அவர்கள் தயாராகியிருக்கவில்லை என்பதனையே எடுத்துக்காட்டுகின்றது. மாறாக அழிவையும் மரணத்தையும் ஏற்படுத்துவதற்காக அவை காணப்படுகின்றன.
உலகளாவிய ரீதியில் பரவிக் காணப்படும் வன்முறையினை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அல்லது அதற்கு விடையளிப்பதற்கு பௌத்தத்தின் செய்தியான சமாதானமே சிறந்த விடையாக இருக்குமென்று நான் நம்புகின்றேன். சமாதானத்தை விட சிறந்த உயர்பெறுமானம் ஒன்றினை காணமுடியாது. இவ்வாறான நிலையில் இலங்கையும் இந்தியாவும் இணைந்து செயற்பட்டு சமாதானம், உபசரிப்பு, இணக்கம் மற்றும் எமது அரசாங்கங்களின் செயற்பாடுகள் கொள்கைகள் ஆகியவற்றினை ஊக்குவிப்பதற்காக புத்தரின் சிந்தனையை பின்பற்ற வேண்டிய தேவையுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM