(லியோ நிரோஷ தர்ஷன்)
இலங்கையுடன் மிகவும் பழையானதும் வலுவானதுமான உறவை இந்தியா கொண்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்து இரு தரப்பு உறவுகள் தொடர்பில் கலந்துரையாட உள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்திலேயே இந்திய பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ் , சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் இலங்கை விஜயம் தொடர்பில் பதிவு செய்துள்ளார்.
டுவிட்டர் பதிவுகளில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொண்டு சர்வதேச வெசாக் தின நிகழ்வு மற்றும் வேறுசில நிகழ்வுகளிலும் கலந்துகொள்வதற்காகவே இலங்கைக்கு செல்கின்றேன். இலங்கை வாழ் அற்புதமான மக்களை சந்திக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன்.
இந்திய பிரதமரின் இந்த பதிவில் தனது விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன். இது தனது இலங்கைக்கான இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயமாகும். இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகள் மேலும் வலுவடைவதற்கு இந்த விஜயம் பெரும் உதவியாக அமையுமென்றும் பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் இன்று மாலை இலங்கைக்கு விஜயத்தை நிறைவு செய்துக் கொண்டு டில்லிக்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM