(க.கமலநாதன்)
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை முன்னிலைப்படுத்தி வெளியாகும் கறுப்புக்கொடி செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும். இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் வெசாக் தின நிகழ்வுகளில் நானும் கலந்துகொள்வேன். எனக்கு எந்த தடையும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல, கோனகல்தெனிய, அரியசிந்தாசிரம விஹாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெசாக் தின நிகழ்வுகளை உயர்ந்த அளவில் நடத்த வேண்டும் என்பதே எமது ஆவலாகும். ஆனாலும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வெசாக் தின நிகழ்வுகளின் போது கறுப்புக் கொடி ஏந்த வேண்டும் என்று கூறினார் என்று வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை.
அந்த விடயத்தில் உண்மையில்லை. பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் கருத்துக்களை திரிபுபடுத்தி உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவதனை தவிர்க்க வேண்டும். இதன் பின்னணியில் உள்ள உண்மையான பிரச்சினையை சகலரும் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் அவரின் வருகையையும் மேற்படி விவகாரத்துடன் சம்பந்தப்படுத்தப் பார்ப்பதானது ஏற்புடையதல்ல. எவ்வாறாயினும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்வுகளில் நானும் கலந்துகொள்வேன் அதற்கு எனக்கு எந்த தடையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM