(ஆர்.ராம்)
ஐக்கிய நாடுகள் சர்வதேச வெசாக் தினத்தை ஆரம்பித்து வைப்பதற்காக இன்று மாலை இலங்கைக்கு வருகைதரும் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இரவு விருந்துபசாரமொன்றை அளிக்கவுள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் இந்த இரவுவிருந்துபசாரமானது இரவு 8.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. இந்த விருந்துபசாரத்தில் கலந்துகொள்ளுமாறு இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர்கள், மாகாண முதலமைச்சர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விருந்துபசாரத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனும் கலந்துகொள்ளவுள்ளார்.
இலங்கைக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் இதில் பங்கேற்கவுள்ளனர்.
இந்த விருந்துபசாரத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்க மட்டார்கள் என அறிவிப்பட்டுள்ளது. நாளைய தினம் மலையகத்திற்கான வரலாற்று விஜயத்தை இந்தியப் பிரதமர் மேற்கொள்ளவுள்ள நிலையில் அதற்குரிய ஏற்பாடுகளை கவனித்துக்கொள்வதற்காக அட்டனில் அவர்கள் முகாமிட்டிருப்பதால் அக்குழுவினர் இதில் பங்கேற்றமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாளையதினம் அட்டன் செல்லும் இந்தியப்பிரதமர் மோடி அங்கு அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியினரையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸையும் தனித்தனியாக டிக்கோயாவில் சந்திக்கவுள்ளார்.
அந்நிகழ்வுகளை பூர்த்தி செய்த பின்னர் மீண்டும் கொழும்பு திரும்பும் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினரை கட்டுநயாக்க விமான நிலையத்தில் விசேட பிரமுகர்களுக்கான கேட்போர் கூடத்தில் மாலை 5 மணியளவில் சந்திக்கவுள்ளனர்.
இக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நான்கு கட்சிகளின் தலைவர்களான மாவை.சோதிராஜா, சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்ந்திரன். செல்வம் அடைக்கலநாதன், கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எம்.பி. ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM