இன்று மாலையும் நாளை காலையும் பல வீதிகள் மூடப்படும் : ஒழுங்கைகள் ஊடாக பயணிப்பதிலும் சிக்கல்

Published By: Robert

11 May, 2017 | 09:22 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

சர்வதேச வெசாக் நிகழ்வை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு இன்று விஜயம் செய்ய உள்ள நிலையில் கொழும்பு நகரில்  இன்று மாலையும் நாளை முற்பகல் வேளையிலும் பல வீதிகள் மூடப்படவுள்ளன. 

இந்திய பிரதமர் பயணிக்கும் பாதை வழியே அவர் பயணிக்கும் சமயம் வேறு எவரும் பயணிக்க அனுமதி வழங்கப்படாது

 என்று பாதுகாப்பு தரப்பு அறிவித்துள்ள நிலையிலேயே கொழும்பின் பல வீதிகள் இதன் போது மூடப்படவுள்ளன. குறிப்பாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஒரு பக்க ஒழுங்கை,  

பேலியகொடை முதல் பேஸ் லைன் வீதியூடாக பயணித்து தாஜ் சமுத்ரா ஹோட்டல் வரையிலான வீதிகள் மற்றும்  அப்பிரதான வீதிகளுடன் இணையும் அனைத்து ஒழுங்கைகளும் ஒவ்வொரு கால நேரத்தில் முற்றாக பொது போக்குவரத்து க்கு மூடப்படவுள்ளன. 

இது தொடர்பில் விஷேட போக்குவரத்து திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட உள்ளது.  இன்று மாலை 6 மணி முதல் குறிப்பிட்ட நேரங்களில் குறிப்பிட்ட பகுதிகளை உள்ளடக்கியதாக இந்த விஷேட போக்குவரத்தும் பாதை மூடும் நடவடிக்கைகளும் இடம்பெறும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.

அதன்படி இந்தியப் பிரதமர் பயணிக்கும் பிரதான வீதிகளும் அதனுடன் இணையும் ஏனைய உள் வீதிகளும் அவரது வாகனத் தொடரணி பயணித்து முடியும் வரை முழுமையாக மூடப்படும் என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டினார்.  

இன்று மாலை 6.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் மோடி, அங்கிருந்து அதிவேக பாதை ஊடாக கொழும்பு நகருக்குள் பிரவேசிக்க உள்ளார். அதன்படி  மூடப்படவுள்ள வீதிகளின் விபரங்கள் வருமாறு, 

இன்றைய தினம் மூடப்படும் வீதிகள்

பி.ப. 6.15 மணிக்கு - கட்டுநாயக்க அதிவேக வீதி, பேலியகொட, பொரளை பேஸ்லைன் வீதி, டி.எஸ் கல்லூரி போக்குவரத்து ஒளி சமிக்ஞை சந்தி, கிரீன் பார்க், தாமரைத் தடாகம், பொதுநூலக சுற்றுவட்டம், ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, மல் வீதி, பித்தளை சந்தி, ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, கங்காராம எல்லை வரை பொதுப் போக்கு வரத்து தொடர்பில் தடைச் செய்யப்படவுள்ளது. 

இரவு 07.15 மணிக்கு - கங்காராம எல்லையிலிருந்து நவம் மாவத்தை, உத்தரானந்த மாவத்தை, முகம்மது மாக்கான் மார்க்கார் மாவத்தை, காலி முகத்திடல் சுற்றுவட்டம், தாஜ் சமுத்ரா ஹோட்டல் வரையில் போக்கு வரத்து தடைச் செய்யப்படவுள்ளது.

இரவு 08.20 மணிக்கு - தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இருந்து காலி முகத்திடல் வீதி, ரவுண்டானாவில், என்.எஸ்.ஏ சுற்றுவட்டம், ஜனாதிபதி மாளிகை வரையிலும் இரவு 10.30 மணிக்கு - ஜனாதிபதி மாளிகையிலிருந்து என்.எஸ்.ஏ சுற்றுவட்டம், காலி முகத்திடல் வீதி ஊடாக தாஜ் சமுத்ரா ஹோட்டல் வரையிலும் வீதிகள் முழுமையாக மூடப்படவுள்ளன.

நாளைய தினம் 

காலை 09.05 மணிக்கு - தாஜ் சமுத்ரா ஹோட்டல், காலி முகத்திடல் சுற்றுவட்டம், கொள்ளுப்பிட்டி சந்தி, லிபர்ட்டி சந்தி, பித்தளை சந்தி, செஞ்சிலுவை சந்தி, பொது நூலக சுற்றுவட்டம், க்ளாஸ்ஹவுஸ் சந்தி, நந்தா மோட்டார்ஸ், சுதந்திரசதுக்க சுற்றுவட்டம், சுதந்திர மாவத்தை, பௌத்தாலோக மாவத்தை, மெட்லாந்ட் பிளேஸ் சந்தி, பௌத்தாலோக மாவத்தை ஊடாக பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபம் வரை வீதி மூடப்படவுள்ளது. 

மு.ப. 10.50 மணிக்கு - பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபம், பௌத்தாலோக மாவத்தை, ஜாவத்தை சந்தியால் இடதுபக்கம் திரும்பி, ஜாவத்தை வீதி, கெப்பிட்டிபொல சந்தியால் வலது பக்கம் திரும்பி கெப்பிட்டிபொல மாவத்தை ஊடாக பொலிஸ் மைதானம் வரை வீதி மூடப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43