பேரீச்சம்பழத்தின் வரியை அரசாங்கம் அதிகரித்துள்ளதாக ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி அண்மையில் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். பேரீச்சம்பழத்தின் மீதான வரி தொடர்பாக உண்மைக்கு புறம்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்து நல்லாட்சிக்கு வாக்களித்த முஸ்லிம்கள் மத்தியில் சலசலப்பையும் சர்ச்சையையும் சந்தேகத்தையும் கிளப்பியிருக்கிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரசாங்கம் பேரீச்சம்பழத்தின் மீது புதிதாக 60 ரூபா வரி அறவிடப்போவதாக தவ றான ஒரு தகவலை அவர் வெளியிட்டு மக்களை தவறாக வழிநடத்த முயற்சி மேற்கொண்டுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை பேரீச்சம்பழத்தின் மீதான இறக்குமதி வரி அதன் பல தரப்பட்ட தரத்துக்கேற்ப வித்தியாசமாக அறவிடப் பட்டிருந்தது. அன்று ஆகக் குறைந்த தரத்தினையுடைய பேரீச்சம்பழம் கிலோ ஒன்றுக்கான வரி 130 ரூபாவாகவே அறவிடப்பட்டது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரவு – செலவு திட்டத்தின் போது இந்த வரி 130 ரூபாவிலிருந்து 60 ரூபாவாக குறைக்கப்பட்டது. இது தொடர்பான 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் இந்த வரி அறிவித்தல் 6 மாத காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்.
2017 ஆம் ஆண்டு மே மாதம் வரையோடு நிறைவுபெறும் இந்த வரியின் காலக்கெடுவை அடுத்த ஆறு மாதங்களுக்கு நீடிக்கும் அங்கீகாரத்தைப் பெறும் வகையிலேயே கடந்த வாரம் இது பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
குறைக்கப்பட்ட மேற்படி 60 ரூபா வரியை அடுத்த ஆறு மாதங்களுக்கு நீடிக் கும் நடவடிக்கையாகவே அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
அது தவிர பேரீச்சம்பழம் மீதான எவ்வித புதிய வரிகளோ அதிகரிப்புகளோ அறிவிக்கப்படாத நிலையில் இந்த உண்மையை மூடிமறைத்த ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் ஹந்துன்நெத்தி, முஸ்லிம்களை திசைதிருப்பும் நோக்கத்தோடு முற்றிலும் பொய்யான தகவலை வழங்கி மக்களை தவறான பக்கம் திசை திருப்பும் மோசமான அரசியலை மேற்கொண்டுள்ளார்.
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு இலவசமாக பகிர்ந்தளிக்கும் நோக்கில் வெளிநாடுகளிலிருந்து அன்பளிப்பாகக் கிடைக்கும் பேரீச்சம்பழங்களுக்குரிய இறக்குமதி வரியை கூட அரசாங்கம் முற்றாக நீக்கியிருப்பதுடன், அதற்கான வரியை அரசாங்கமே இதுவரையிலும் செலுத்தியும் வருகிறது.
பொய் வதந்தி பரப்பி மக்களைக் குழப் பும் ஜே.வி.பி.யின் இந்த நிலைப்பாடு நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் நடவடிக்கையாகும்.
முஸ்லிம்கள் மீதான அதீத அக்கறையில் இருப்பது போன்ற ஒரு போலியான நிலையை ஜே.வி.பி. காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறது. தோல்வியடைந்த அரசியல் சக்திகளின் பின்னணியில் முஸ்லிம்களுக்கெதிராக இனவாத சக்திகளின் செயற்பாடுகள் இடம்பெற்றுவரும் நிலையில் அவற்றிற்கு எதிராக வாய் திறக்காமல் இருக்கும் ஜே.வி.பி. பேரீச்சம்பழ விவகாரத்தை மட்டும் பொய்யாக பெரிதுபடுத்தி காட்டுவதன் மூலம் நல்லாட்சியின் மீது முஸ்லிம்களின் அதிருப்தியை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்துள்ளது.
சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதாக காட்டிக்கொள்ளும் ஜே.வி.பி., வில்பத்து விவகாரம், இறக் காமத்தில் முஸ்லிம்களின் காணி மீதான அத்துமீறல், சிறுபான்மை மக்கள் வாழும் பிரதேசங் களில் இடம்பெறும் மத ரீதியிலான அடக்குமுறை போன்ற விவகாரங்களில் மௌனம் சாதித்துக்கொண்டு முஸ்லிம் களின் உரிமைகள் பற்றி கதையளப் பது நல்லாட்சி அரசாங்கத்திற்கு அசௌக ரியத்தை ஏற்படுத்தவும் தமது சுயநல அரசியல் நோக்கங்களை குறுக்கு வழியில் அடையும் நோக்கத்திலுமேயாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM