(லியோ நிரோஷ தர்ஷன்)
புதிய அரசியலமைப்பு, சர்வஜன வாக்கெடுப்பிற்கான எவ்விதமான சிறிதளவான வாய்ப்பும் தற்போதைக்கு இல்லை. ஆனால், அமைச்சரவையில் மாற்றம் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதைவிட தனித்து ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒய்வின்றி உழைத்து வருகின்றது என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை மீண்டும் வலுப்படுத்தும் நடவடிக்கையில் முழுமையாக ஈடுபட்டுள்ளோம். அதே போன்று சுதந்திர கட்சியின் மறுசீரமைப்பு பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றக. இவை அனைத்தும் உள்ளுராட்சிமன்ற தேர்தலை எதிர் கொள்ளும் நோக்கிலேயே இடம்பெறுகின்றக. இதற்கு அமைவாக அடுத்த வாரம் இடம்பெறவுள்ள மத்திய செயற்குழுவில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கையிலேயே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில் ,
அரசியலமைப்பில் திருத்தம் தேவை என்பதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நிலைப்பாடே தவிர , புதிய அரசியலமைப்பு அல்ல . எனவே சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவது தொடர்பில் எவ்விதமான பேச்சுக்களும் இதுவரையில் கட்சிக்குள் எடுக்கப்பட வில்லை. 2020 இல் தனித்து ஆட்சி அமைப்பதற்கு தேவையான வியூகங்களையே தற்போது தயார்ப்படுத்தி வருகின்றோம். அதனடிப்படையில் அடுத்து வரவுள்ள உள்ளுராட்சிமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெறுகின்றன.
அதே போன்று அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தீர்மானங்களுக்கு வந்துள்ளனர். பிரதமர் இதற்கு எதிர்ப்பு என்ற கருத்தில் எவ்விதமான உண்மையும் இல்லை. குறிப்பிட்ட சில துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் . ஆனால் எப்போது மாற்றம் ஏற்படும் என கூற இயலாது . எப்போதும் ஏற்படாலாம் என்பதே உண்மையகும்.
தேசிய அரசாங்கத்திற்குள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொள்கைகளை முன்னெடுத்து செயற்பட வேண்டிய தேவை எமக்குள்ளது. எனவே ஒய்வின்றி உழைக்கின்ற நிலையே சுதந்திர கட்சிக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினை மேலும் வலுப்படுத்தி செயற்திறன் மிக்கதாக்கும் நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுப்பட்டுள்ளோம். இதற்கு அமைவாக கூட்டு எதிரணியில் உள்ளவர்களும் இணைந்து கொள்வார்கள். சில சந்தர்ப்பங்களில் ஜீ.எல்.பீரிசின் கட்சியில் உள்ளவர்கள் தனித்து செயற்பட வாய்ப்புள்ளது. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜாதகத்தில் தற்போது சிறந்த காலமாக காணப்படுகின்றது.
இதனை ஒரு பெரிய சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. மஹிந்த ராஜபக்ஷவிற்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டதாக கூறுகின்றனர். புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிற்கு ஒரு கண் பாதிக்கப்பட்டு போனது. ஆனால் அவர் பாதுகாப்பு கேட்டு அடம்பிடிக்க வில்லை. தேசிய புலனாய்வு பிரிவின் அறிக்கைகளின் அடிப்படையிலேயே தனிநபர் பாதுகாப்பு குறித்து தீர்மானிக்கப்படும் . இதில் எமக்கு எவ்விதமான பங்கும். இல்லை. தேவை எனில் இன்னும் பாதுகாப்பு தரலாம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM