சிங்கள மொழியில் பல பாடல்களுக்குச் சொந்தக்காரரான பிரபல இளம் சிங்களப் பாடகர் மொஹான் விக்கிரமசூரிய பௌத்த துறவியாகிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரத்தினபுரியைச் சேர்ந்தவர் மொஹான் விக்கிரமசூரிய. இவர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் பணிபுரிந்து வந்தவர். இசையில் பெரும் ஆர்வம் உள்ள இவர், சமீப காலமாக முழு நேரப் பாடகராக வலம் வந்துகொண்டிருந்தவர். இவரது பல பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மொஹான் பௌத்த துறவியாக மாறினார். கடவத்தை, வேபடவில் உள்ள ‘அரஹந்தக சமாதி ஆரண்ய’ என்ற பௌத்த மடாலயத்தில் இவர் துறவறம் ஏற்றுக்கொண்டார். சிறு வயது முதலே பௌத்த சமயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததாகவும், அதன் விளைவாகவே அவர் துறவறம் ஏற்றுக்கொண்டார் என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
துறவியாக மாறிய மொஹானின் தற்போதைய துறவறப் பெயர் ரத்னபுரே சித்தசத்தி தேரோ என்பதாகும்.
இச்செய்தி அறிந்த சிங்கள ரசிகர்கள் பலரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM