இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இன அழிப்பை முள்ளிவாய்க்கால் துக்க நினைவு வாரமாக அனுஷ்டிக்க அனைவரும் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள வடக்கு மாகாண சபை உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம், முள்ளிவாய்க்காலின் இறுதி நாள் நினைவு தினம் அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவிற்கு வருவதனை தவிர்க்க வேண்டும். அவ்வாறு மீறியும் வருகை தந்தால் அவரை வெளியேறக் கோரி முல்லைத்தீவில் பெரும் போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் வடக்கு மாகாண சபையின் வவுனியா மாவட்ட உறுப்பினரான தியாகராஜா, கிளிநொச்சி மாவட்ட உறுப்பினரான பசுபதிப்பிள்ளை, ஆகியோருடன் இணைந்து சிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்போன்றை நேற்றைய தினம் பிற்பகல் இரண்டு மணியள வில் நடத்தியிருந்தார். இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதா வது,
இலங்கை அரசாலும் அதன் படைகளாலும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை நினைவு தினமாக முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் வருடம் தோறும்,மேமாதம் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை உலகத்தமிழர்களால் அனுஷ்டிக்கப்படுகின்றது. அனைத்து உலக தமிழர்களின் துக்க நாளாக இருக்கும் இந்த நினைவு வாரத்தை அனுஷ்டிப்பதற்கு வட க்கு மாகாண சபை இந்த முறையும் தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் ஆரம்ப நாளான எதிர்வரும் 12 ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவினால் அரங்கேற்றப்பட்ட செம்மணி படுகொலை நடைபெற்ற இடத்தில் நினைவஞ்சலிகள் இடம்பெறவுள்ளன.
13 ஆம் திகதி கிழக்கு மாகாணத்திலும், 14 ஆம் திகதி ஈழத்தமிழர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டை தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட இடத்திலும், அதே நாளன்று நவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் நடைபெற்ற படுகொலையை நினைவு கூரும் வகையிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. 15 ஆம் திகதி குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்ட குமுதினி படுகொலை நினைவு தூபியிலும், 16 ஆம் திகதி வவுனியாவிலும், கிளிநொச்சியிலும், 17 ஆம் திகதி மன்னாரிலும், இறுதி நாளான 18 ஆம் திகதி அன்று முள்ளிவாய்க்காலில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தலைமையில் நினைவு தின நிகழ்வு கள் நடைபெறவுள்ளன.
இந்த நினைவு நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்களும் அரசியல் கட்சி பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த நிகழ்வில் அரசியல் வேறுபாடின்றி அனைவரும் கலந்து கொள்ள முன்வர வேண்டும். குறிப்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியன நினைவு தின நிகழ்வை ஒன்றாக நின்று நடத்துவதற்கு முன்வர வேண்டும் எனவும் அவர் கோரி க்கை விடுத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM