முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பாதுகாப்பு கடமையிலிருந்து மேலும் 50 பேர் இன்று (நேற்று) நீக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற அவரின் புத்தக வெளியீட்டின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பாதுகாப்பில் மேலும் ஐம்பது பேரை இன்று (நேற்று) குறைத்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கின்ற ஒரு தறுவாயில் அவரின் பாதுகாப்பை குறைப்புச் செய்துள்ளமை ஏற்புடையதல்ல.
இதற்கு முன்பாகவும் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள் 42 பேரை நீக்கியிருந்தனர். அமைச்சர் சாகல ரத்நாயக்கவின் கோரிக்கையின் பிரகாரம் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர இவ்வாறு பாதுகாப்பு குறைப்பைச் செய்கின்றார்.
முக்கியஸ்தர்களுக்கான பாதுகாப்பை பொறுத்தமட்டில் குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு காலம் அதிகரிப்புச் செய்யப்பட வேண்டும் என்பதே நியதியாகும். ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு வாராந்தம் குறைக்கப்படுகின்றது என்றார். எவ்வாறாயினும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரியந்த ஜயக்கொடி மேற்படி விடயம் உண்மையாக இருக்க முடியாது என்றும் இது குறித்து தமக்கு எந்த வித அறிவித்தல்களும் கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM