இந்திய மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதை தடுக்கும் வகையில், நடுக்கடலில் இலங்கை பெயர் தரித்த எல்லைப் பலகையொன்று வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று தகவல் பகிர்ந்துள்ளது.
மேலும் நடுக்கடலில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டாமல் இருக்கும் வகையில் எல்லைப் பலகையை இலங்கை அரசாங்கம் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லைத் தாண்டி வந்து மீன்பிடிப்பதனால் தமிழக மீனவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. குறித்த கைது நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் இரு நாட்டு அரசாங்கங்களுகிடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையில் தற்போது இலங்கையிலிருந்து 5 ஆவது மணல்திட்டில், இலங்கை கொடியுடன் குறித்த எல்லைப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்கு செல்லாமல் இருப்பதற்காக, தனுஷ்கோடியிலிருந்து 5வது மணல்திட்டில் இந்திய எல்லைப் பலகையை அந்நாட்டு அரசாங்கம் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM