மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள நல்லாட்சி அரசாங்கம் நியமித்த ஊழலைக் கட்டுப்படுத்தும் குழுவின் அலுவலகத்தை மூடிவிட நல்லாட்சி அரசின் ஒரு தரப்பினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன் ஆரம்பகட்ட நடவடிக்கையாக தற்போது ஊழலைக் கட்டுப்படுத்தும் குழுவின் செயலகத்தின் மூலம் நிதிக் குற்றச்சாட்டுப் பிரிவுக்கு முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் ஒரு பகுதி இரகசிய பொலிஸாருக்கும் ஏனைய விசேட விசாரணைப் பிரிவுகளுக்கும் அனுப்பி வைக்கும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து முறைப்பாடுகளும் நிதிக் குற்றங்கள் தொடர்பானவை என்பதால் அது தொடர்பாக நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளைக் கொண்ட குழுவை நிதிக் குற்றப் பிரிவிலிருந்து அப்புறப்படுத்தி ஏனைய பிரிவுகளுக்கு ஒப்படைப்பது கேள்விக்குறியாகவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM