கொழும்பு மாநகரில் ஏற்பட்டிருக்கும் போக்குரத்து நெரிசலை கட்டுப்படுத்த விசேட திட்டங்களை அமுல்படுத்தி வருவதாக மாநகர அபிவிருத்திப் பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
அத்துடன் இலகு ரயில் சேவை மற்றும் மாற்றுப்பாதைகளை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் லசந்த அழகியவண்ண சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி பதில் நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரன எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஏழு முக்கிய வீதிகளில் இந்நிலை காணப்படுகின்றது.
விசேடமாக, அரசாங்க அலுவல்கள் பத்தரமுல்லைக்கு மாற்றப்பட்டுள்ளதால் பத்தரமுல்லை முதல் கோட்டை வரையிலான வீதி கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையை தவிர்ப்பதற்காக நாங்கள் வீதி அபிவிருத்திப் பணிகளுடன், விசேட திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.
கொழும்பில் அண்மையில் பரிசோதித்துப் பார்க்கப்பட்ட பஸ்களுக்கான புது வழித்திட்டம் வெற்றியளித்துள்ளது. இதனை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
கொழும்பு நகரிலுள்ள அரசாங்க அலுவலயங்கள் அனைத்தும் பத்தரமுல்லைக்கு மாற்றும் தூரநோக்குடனான திட்டத்துடன் செயலாற்றி வருகின்றோம்.
விசேடமாக, சகல மாற்றுப்பாதைகளையும் உருவாக்குவதுடன் பத்தரமுல்லை முதல் கோட்டை வரை இலகு ரயில் சேவையொன்றினை விரைவில் ஆரம்பிக்கவும் தீர்மானித்துள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM