முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளால் பல கோடி ரூபா பெறுமதியான தங்கம், வைரங்கள் உட்பட ஆயுதங்கள் புதைக்கப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் இரண்டு இடங்களில் தேடுதல் நடத்திய போதிலும் பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வள்ளிபுனம் பகுதியிலும் ஆனந்தபுரம் பகுதியிலும் விடுதலைபுலிகளால் தங்கங்களும், வைரங்களும்,ஆயுதங்களும் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ் .எம் சம்சுதீன் கட்டளைக்கு அமைவாக இந்த தேடுதல் நடைபெற்றது.
புதைத்து வைக்கப்பட்ட இடங்கள் இராணுவத்தினதும், பொலிசாரினதும் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை வள்ளிபுனம் நடனமிட்டான் பிள்ளையார் ஆலயத்தின் குளக்கரையிலும், ஆனந்தபுரம் பகுதயிலும் இரண்டு மணித்தியாலங்களுக:கு மேலாகவும் தோண்டப்பட்டது.
அடையாளப்படுத்தப்பட இடங்கள் 15 அடி வரை தோட்டப்பட்ட போதும் தங்கமோ வைரமோ கிடைக்கவில்லை. அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் எதுவும் கிடைக்காமையால் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியின் கட்டளைக்கு அமைவாக தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM