(எம்.எப்.எம்.பஸீர்)
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனுரத்த பாதெனியவுக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் நேற்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பேராசிரியர்களான சரத் விஜேசூரிய, காமினி வெயங்கொட ஆகியோர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி இடம்பெற்ற சைட்டத்துக்கு எதிரான மக்கள் அலை எனும் தொனிப்பொருளில் நடைப்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு நீதிமன்றை அவமதித்ததாக கூறியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த கூட்டத்தில் உரையாற்றும்போது, சைட்டம் தொடர்பில் மேன் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அவர் விமர்சித்ததன் ஊடாகவும் மேலும் சில கருத்துக்களை வெளிட்டதன் ஊடாகவும் இவ்வாறு நீதிமன்றை அவமதித்ததாக இதன்போது மனுதாரர்கள் சுட்டிக்காட்டினர்.
நீதிமன்றை அவமதித்த அவரது கருத்து தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்பதை கருத்தில் கொண்டு இனிமேல் அவ்வாறு நடைபெறாது இருப்பதை உறுதி செய்ய அவருக்கு உரிய தண்டனையை வழங்குமாறு கோரியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM