தனது தந்தையால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட 13 வயது சிறுமியொருவர் 36 ஆவது மாடியிலுள்ள குடியிருப்பொன்றிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
ஷாங்ஸி மாகாணத்தில் சாங்ஸி எனும் இடத்தைச் சேர்ந்த குவோ என சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் குறிப்பிட்ட சிறுமி, தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதி வைத்திருந்த துண்டுக் குறிப்புகள் மீட்கப்பட்டுள்ளன.
அதில் ஒரு துண்டுக் குறிப்பில், "நான் விபரிக்க வேண்டியதல்லாத பல விடயங்கள் உள்ளன. நான் இந்த இரகசியங்களை நீங்கள் அறிந்து கொள்ள அனுமதிக்கப்போவதில்லை. நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன்” என குவோ தெரிவித்துள்ளார்.
அதேசமயம், பிறிதொரு துண்டுக் குறிப் பில், "மரணம் இன்னொரு ஆரம்பமாகும். வேதனையை மறக்க அது அவசியமாகவுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த சிறுமியின் பெற்றோர் விவாகரத்துப் பெற்ற நிலையில் அவர் தனது அத்தையொருவருடன் வசித்து வந்ததாகவும் இதன்போதே அவர் தனது தந்தையால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சிறுமி அவரது தந்தையால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சமயம் அவரது அத்தை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்ததுடன் சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் அந்த சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட மைக்கான சான்றுகளை சேகரிக்கும் நடவடிக்கையில் சிறுமியிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டதால் அவர் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி தற்கொலை முடிவை நாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுமியின் மரணத்தையடுத்து அவரது தந்தையை பொலிஸார் கைதுசெய்துள்ள னர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM