ஜல்லிக்கட்டு போட்டிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட 13 மனுக்கள் மீதான விசாரணைகளையடுத்து நேற்று ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்தது.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் எங்கும் நேற்று போராட்டங்கள் வெடித்ததோடு அலங்காநல்லூரில் இரு இளைஞர்கள் தீக்குளிக்க முயற்சித்தமை பரபரப்பை ஏற்படுத்தியது.
பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதியை மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை வழங்கியது. இதனை எதிர்த்து விலங்குகள் நலவாரியம் உள்ளிட்ட தரப்பினர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த 13 மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி தாக்கூர் தலைமையிலான அமர்விலிருந்து நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரமணா ஆகியோர் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டு நேற்று விசாரணை நடைபெற்றது.
விலங்குகள் நலவாரியம் சார்பாக வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதிட்டார். அவர் தமது வாதத்தில், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து ஏற்கனவே உள்ள அறிக்கையை மீற முடியாது. புதிய அறிக்கையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க புதிய அம்சத்தை சேர்த்தது சரியல்ல என்று கூறினார். மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹக்கி ஆஜராகி வாதாடினார்.
புதிய அறிக்கையில் காளைகள் வதை தொடர்பாக கவனத்தில் கொண்டுள்ளோம் என்று அவர் தெரிவித்தார். மேலும் ஜல்லிக்கட்டுக்கு தேவையெனில் உச்சநீதிமன்றம் நிபந்தனை விதிக்கலாம் என்றும் அவர் கூறினார். தமிழக அரசு சார்பில் ராஜேஸ்வர ராவ், சேகர் நாப்டே ஆகியோர் ஆஜராகினர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். அனுமதியளித்த மத்திய அரசின் அறிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, "காட்சிப்படுத்தப்படும் விலங்குகள்" பட்டியலில் உள்ள காளையை நிபந்தனையுடன் ஜல்லிக்கட்டு போட்டியில் ஈடுபடுத்த வகை செய்யும் அரசாணையை மத்திய அரசு கடந்த 8 ஆம் திகதி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இருப்பினும் மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மனுதாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பு கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மத்தியில் நிலவிவருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM