(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)
முஸ்லிம்களின் நோன்பு மாதம் வருவதனை அறிந்து அரசாங்கம் பேரீச்சம்பழத்திற்கான வரியை அதிகரித்துள்ளது. இதன்மூலம் நோன்பு நோற்கும் மக்களின் ஊடாக வருமானத்தை ஈட்டவே அரசாங்கம் முயற்சிக்கிறது. எனவே இது தொடர்பாக முஸ்லிம் அமைச்சர்கள் என்ன செய்ய போகின்றனர்? அவர்கள் பதில் வழங்குவார்களா என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை விசேட வியாபார பண்ட அறவீட்டு சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
முஸ்லிம்களின் நோன்பு மாதம் வருவதனை அறிந்து அரசாங்கம் பேரீச்சம்பழத்திற்கான வரியை அதிகரித்துள்ளது. விசேட வியாபார பண்ட அறவீடு மூலம் பேரீச்சம்பழத்திற்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. வெங்காயம், உருளைக் கிழங்கு இறக்குமதி உணவு வகையில் அதிகரிப்பதன் ஊடாக பயிர்செய்கையாளர்கள் இலாபம் பெறுவார்கள் என கூறமுடியும். எனினும் பேரீச்சம்பழ வரி அதிகரிக்கப்படுகின்றது என்றால் இங்கே பேரீச்சம்பழம் பயிரிடப்படுகின்றதா? பேரீச்சம்பழ பயிர்செய்கையாளர்கள் இலங்கையில் உள்ளனரா? இல்லை; நோன்பாளிகளை வைத்து அரசாங்கம் தனக்கு இலாபம் ஈட்டவே முயற்சிக்கிறது. இது பெரும் அநியாயமாகும்.
எனவே இது தொடர்பாக அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் அமைச்சர்கள் என்ன செய்யப்போகின்றனர்? பெரிதாக தம்மை முஸ்லிம் தலைவர்கள் என அறிமுகப்படுத்துபவர்கள் என்ன பதில் வழங்க போகின்றனர்?
அத்துடன் சீனாவுடன் இம்மாதம் சுதந்திர வர்த்தக ஒப்பந்ததை அரசாங்கம் கைச்சாத்திடவுள்ளது. இதனால் இலங்கையின் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவர். சீனர்கள் இலங்கை வந்தால் பீல்ட் மார்ஷலினால் கூட ஒன்றும் செய்ய முடியாது. தற்போது சீனர்கள் அமெரிக்காவை கூட ஆக்கிரமித்துள்ளனர். எனவே பெரிய சந்தையை கொண்ட நாட்டுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டு அரசாங்கம் என்ன செய்ய போகின்றது என கேள்வி எழுப்பினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM