வடக்கு மாகாணம் ஆளுநர் ஆட்சியில் இருந்ததைவிட புதிதாக என்ன அபிவிருத்தியை கண்டிருக்கிறது? என கேள்வி எழுப்பிய வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா, அபிவிருத்திக்கு கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் வடக்கு மாகாணசபை தவறவிட்டிருக்கின்றது என குற்றஞ்சாட்டியுள்ளார்.
வட மாகாணசபையின் மூன்றரை வருட செயற்பாடுகள் தொடர்பாக யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “வடக்கு மாகாணம் கல்வியிலும் அபிவிருத்தியிலும் 9 ஆவது இடத்தில் காணப்படுகிறது. குறைந்தபட்சம் ஆசிரியர்களையேனும் சரியாக பங்கிடத்தெரியாத நிலையில் வடக்கு மாகாணசபை உள்ளது.
அதேவேளை, வடக்கில் கழிவு முகாமைத்துவம் முறையாக செய்யப்படாத நிலையில் மாநகரம் கழிவுகளால் நிரம்பி காணப்படுகின்றது. வடக்கு மாகாணசபை செய்யவேண்டிய விடயங்களைக்கூட செய்யாமல் விட்டிருக்கின்றது.
அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு நியதிச்சட்டங்களை உருவாக்கவேண்டும் அவற்றைக்கூட இந்த மாகாணசபை செய்திருக்கவில்லை.
அரசாங்கம் வழங்கும் மிக சொற்பமான நிதியை தவிர இந்த மாகாணசபை வேறு எந்த நிதியை பெற்றிருக்கின்றது? சுகாதார அமைச்சு, அரசு வழங்கும் நிதிக்கு மேலதிகமாக சுமார் 9 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதியை பெற்று மக்களுக்காக பயன்படுத்தியுள்ளது.
இதேபோன்று இரணைமடு- யாழ்ப்பாணம் நீர் திட்டத்தை நிராகரித்தவர்கள் இதுவரை அதற்காக வழங்கிய மாற்று திட்டம் என்ன? சுமார் 360 தீர்மானங்களை வடக்கு மாகாணசபை நிறைவேற்றியுள்ள போதிலும் அதனால் எந்த பயனும் கிடையாது. தீர்மானங்கள் சட்ட வலுவற்றவை” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM