(பா.ருத்ரகுமார்)
வித்தைக்காரன், மோசடிக்காரன், போன்றவார்த்தை பிரயோகங்களினால் பிணைமுறி தொடர்பில் விசாரணைசெய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று பிரச்சினை எழுந்திருந்தது.
மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரும் ஊழல் எதிர்ப்பு அமைப்பின் ஏற்பாட்டாளரும் அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் தலைவருமான வசந்த சமரசிங்க பிணை முறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்றும் சாட்சியமளிக்க வருகைத்தந்திருந்தார்.
எதிர்தரப்பு சட்டத்தரணி மற்றும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனின் எதிர்தரப்பு விசாரணைகள் இடம்பெற்றிருந்தபோது இடையில் மக்களின் பணத்தை பாதுகாக்கும் மத்திய வங்கியின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் மோசடிக்காரர்களும் வித்தைக்காரர்களும் நாட்டைப்பற்றி யோசிப்பதில்லை என்றும் தன்னால் ஆணைக் குழுவுக்கு அனுப்பட்ட விசாரணை அறிக்கையை மத்தியவங்கியின் ஆவணங்களுடன் ஒப்பிட்டுபார்க்குமாறும் கேட்டுக்கொண்டார்.
எதிர் தரப்பு சட்டத் தரணிகளான சானக டி. சில்வா, மற்றும் பெர்னாண்டோ ஆகியோர் மோசடிக்காரர்கள் மற்றும் வித்தைக்காரர்கள் என கூறுவது ஆணைக் குழுவுக்கு களங்கம் விளைவிக்கும் பொறுத்தமற்ற சொற்கள் எனவும் இவ்வார்த்தைகளை இனிமேல் பாவிக்க இடமளிக்க கூடாது எனவும் கேட்டுக்கொண்டனர்.
இதன்போது குறுக்கிட்டு பேசிய வசந்த சமரசிங்க என்னைப் பொறுத்தவரையில் மத்தியவங்கியில் 2015 பெப்ரவரி 27 ஆம் திகதி நடந்த சர்ச்சைக்குரிய பிணைமுறி ஏலத்தின் போது மக்களை ஏமாற்றியவர்கள் அனைவருமே மோசடிக்கார்களே அவர்கள்தான் வித்தைக்காரர்கள் எனவும் எனது தனிப்பட்ட கருத்தின்படியேதான் அவ்வாறு கூறியதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் பிணைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர்கள் குறுக்கிட்டு அவ்வாறு கூறுவது உங்களது தனிப்பட்ட விருப்புக்காகவிருந்தாலும் தனிப்பட்ட வகையில் அவ்வாறான வார்த்தை பிரயோகங்களை பிரயோகிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த வசந்த சமரசிங்க ஆணைக்குழுவின் தலைவர்கள் மீது வைத்துள்ள மரியாதையின் நிமித்தம் இனிமேல் அவ் வார்த்தைகளை பிரயோகிக்கமாட்டேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM