இயக்குநர் ஹரி பொலீஸ் கதைகளை கொமர்ஷல் அம்சங்களுடன் படமாக்கி வெற்றிக் காண்பதில் வல்லவர். இவர் தற்போது 2003 ஆம் ஆண்டில் இவரது இயக்கத்தில் வெளியான ‘சாமி ’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார். இதில் விக்ரமுடன் திரிஷாவும் நடிக்கவிருப்பதாக பேச்சு இருந்தது. தற்போது விக்ரமுடன் மற்றொரு நடிகையும் ஜோடியாக நடிக்கவிருக்கிறாராம். இதற்காக நடிகை கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இறுதியில் அவர் தன்னுடைய கேரக்டரைக் கேட்டுவிட்டு நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இருப்பினும் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரம் ஹரி கூட்டணி இணையும் ‘சாமி 2’ படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் செப்டம்பரில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் தற்போது கௌதம் வாசுதேவனின் இயக்கத்தில் துருவ நட்சத்திரம், விஜய் சந்தர் இயக்கத்தில் ஸ்கெட்ச் ஆகிய படங்களில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM