கடந்த நான்கு மாதங்களில், சமூக வலைத் தளங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில், சுமார் 1,100 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, இலங்கை கணினி அவசரத்தயார் நிலைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அப்பிரிவின் பாதுகாப்புப் பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவிக்கையில்,
போலியான பேஸ்புக் கணக்குகள் தொடர் பிலேயே அதிகளவிலான முறைப்பாடு கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதேநேரம் அனுமதியின்றி வேறு நபர்களின் புகைப்படங்களை பயன்படுத்திக்கொண்டு முகநூல் கணக்குகளை வைத்திருப்பவர்கள் தொடர்பிலும் முறைப்பாடுகள் பல கிடைக்கப்பெற்றுள்ளன.
2016ஆம் ஆண்டு, போலியான பேஸ்புக் கணக்குகள் தொடர்பில், 2,200 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளமை கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும் மேலும் இந்த பிரச்சினையிலிருந்து பாது காப்பு பெற்றுக்கொள்வது முகநூல் பாவனையாளர்களின் செயற்பாடுகளை பொறு த்தே அமைந்திருக்கும்.
காரணம் ஒருவரி கணக்கில் தேவைக்கு ஏற்ற அளவிலான புகைப்படங்களை பயன் படுத்துவதே அவர்களுக்கு பாதுகாப்பாக அமையும் மாறாக அளவிற்கு அதிகமான புகைப்படங்களை பயன்படுத்துவது பிரச்சி னைகளையே தோற்றுவிக்கும் எனவும் மேற்படி குழுவின் நிபுணர்கள் சுட்டிக்காட் டியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM