பிட்டகோட்டே பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவின் பெயர் பலகையில் உள்ள யானை சின்னத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிளை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கு அமைச்சு செயலாளரின் பிட்டகோட்டே, எபிட்டமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டில் பாதுகாப்பு கடமையில் ஈடுப்பட்ட மிரிஹான பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்டு கடமையில் ஈடுபட்டு வந்த பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை அமைச்சரின் செயலாளரின் வீடு நோக்கி கடமைக்கு சென்று கொண்டிருக்கும் போது, குறித்த கான்ஸ்டபிள் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கி மூலம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக அறிய முடிகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM