விற்பனைக்காக வீட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை மீட்டுள்ளதோடு, அதனை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரை நேற்று மாலை ஊவாபரணகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஊவாபரணகம கட்டுகல்ல பகுதியில் வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த இரகசியத் தகவலின்படி சந்தேகநபரான 39 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த தாயின் வீட்டில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்ட பொலிஸார் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான குறித்த தாயை வெலிமடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தயிருப்பதாகவும், கஞ்சா போதைப்பொருளும் நீதிமன்றில் கையளிக்கப்படவுள்ளதாகவும் ஊவாபரணகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM