இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாஸவின் 24 ஆவது நினைவு தின நிகழ்வு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்கு அருகிலுள்ள ரணசிங்க பிரேமதாஸவின் உருவச்சிலை முன்றலில் இன்று முற்பகல் நடைபெற்றது.
வணக்கத்துக்குரிய பௌத்த மதகுருமார்களின் வழிபாட்டுடன் ஆரம்பமான நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, பௌத்த மதகுருமார்களுக்கு காணிக்கைகளை வழங்கினார். அத்துடன் ஜனாதிபதி அவர்கள், ரணசிங்க பிரேமதாஸவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
அதிவணக்கத்துக்குரிய இத்தேபான தம்மாலங்கார தேரர், அதிவணக்கத்துக்குரிய நியங்கொட விஜிதசிறி தேரர் உள்ளிட்ட பௌத்த மதகுருமார்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் அமைச்சர் சஜித் பிதேரமதாஸ, ஹேமா பிரேமதாஸ அம்மையார் உட்பட ரணசிங்க பிரேமதாஸ அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் பெருமளவானோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM