தொழி­லாளர் வர்க்­கத்தின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காணும் மேடை­யாக பயன்­ப­டுத்­துங்கள் : எதிர்க்­கட்சித் தலைவர்  

Published By: Priyatharshan

01 May, 2017 | 10:51 AM
image

தொழி­லாளர் வர்க்­கத்தின் போராட்டம், வெற்றி மற்றும் அவர்கள் முகம்­கொ­டுத்து வரு­கின்ற சவால்கள் என்­ப­வற்­றினை முன்­னி­லைப்­ப­டுத்தி அவர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணும் ஒரு மேடை­யா­கவும் தொழி­லா­ளர்­களின் முயற்­சி­களை நினைவு கூர்­வ­தற்­கான ஒரு சந்­தர்ப்­ப­மா­கவும் தமது மே தினக் கொண்­டாட்­டத்தை அமைத்துக் கொள்­ளு­மாறு அனைத்து அர­சியல் கட்­சி­க­ளி­டமும் நான் வேண்­டுகோள் விடுக்க விரும்­பு­கின்­றேன் என்று தமிழ்க் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான   இரா.சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார். 

சர்­வ­தேச தொழி­லாளர் தினத்தை முன்­னிட்டு அவர் விடுத்­துள்ள செய்­தியில்  மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

சர்­வ­தேச தொழி­லாளர் தினம் என்­பது தொழி­லாளர் வர்க்­கத்­தி­னரின் வெற்­றிக்கு வர­வேற்­பினை பெற்றுக் கொடுப்­ப­தற்கும்இ உல­கவாழ் மக்­களின் பொரு­ளா­தார மற்றும் சமூக உரி­மை­களைப் பா-து­காப்­ப­தற்­கா­கவும் தியா­கங்­களைச் செய்த தொழி­லா­ளர்­க­ளுக்கு மரி­யாதை செலுத்­து­வ­தற்கும் கிடைக்கப் பெற்­றுள்ள ஒரு சந்­தர்ப்­ப­மாகும்.

தற்­போ­தைய நிலைக்கு இலங்­கையை கொண்டு வரு­வ­தற்­காக பல வருட கால­மாக தொழி­லாளர் வர்க்­கத்­தினர் முக்­கிய பங்­க­ளிப்புச் செலுத்­தி­யுள்­ளனர். அதனால் எமது நாட்டின் முன்­னேற்றம் மற்றும் அபி­வி­ருத்­தியின் பொருட்டு தமது சக்­தியை ஈடு­ப­டுத்தி சேவை­யாற்­றிய தொழி­லாளர் வர்க்­கத்­தி­ன­ருக்கு எனது மன­மார்ந்த நன்­றி­யினை இச்­சந்­தர்ப்­பத்தில் தெரி­வித்துக் கொள்ள விரும்­பு­கின்றேன்.

எமது நாடா­னது தற்­போது வர­லாற்­றில் ஒரு முக்­கிய கட்­டத்­தினை அடைந்­துள்­ளது. எனவே தேசிய அபி­வி­ருத்­திக்­காக சிறப்­புடன் பணி­யாற்றும் அதேவேளை தேசிய ஒற்­றுமை மற்றும் நல்­லி­ணக்கம் என்­ப­வற்­றினை அடைந்து கொள்­வ­தற்­காக உணர்ச்­சி­பூர்­வ­மாக அர்ப்­ப­ணிப்­புடன் பணி­யாற்­று­மாறும் தொழி­லாளர் வர்க்­கத்­திடம் வேண்­டிக்­கொள்ள நான் விரும்­பு­கின்றேன்.

இறு­தி­யாகஇ இந்­நாளில் தொழி­லாளர் வர்க்­கத்தின் போராட்டம்இ வெற்றி மற்றும் அவர்கள் முகம்­கொ­டுத்து வரு­கின்ற சவால்கள் என்­ப­வற்­றினை முன்­னி­லைப்­ப­டுத்தி அவர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணும் ஒரு மேடையாகவும் தொழிலாளர்களின் முயற்சிகளை நினைவு கூர்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் தமது மே தினக் கொண்டாட்டத்தை அமைத்துக் கொள்ளுமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன் என்று அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59