சிறப்பான எதிர்காலமொன்றிற்காக உரையாடல் ரீதியான, இணக்கப்பாடு மிக்க பணியினை மேற்கொள்ள இம்முறை மே தினத்தை சந்தர்ப்பமாக மாற்றிக் கொள்வோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள மே தினச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வேலை செய்யும் மக்களின் வியர்வை மற்றும் உழைப்பின் மீதே முழு உலகமும் தங்கியுள்ளது. வரலாறு முழுவதும் அவர்கள் தமது உரிமைகளுக்காக மேற்கொண்ட தொடர்ச்சியான போராட்டம் மற்றும் அர்ப்பணிப்பின் விளைவாக உலகின் கவனத்தை தொழிலாளர் மீது ஈர்க்கும் வகையில் சர்வதேச ரீதியாக மே தினத்தைக் கொண்டாடுவது ஆரம்பாகியது.
தற்காலத்தில் உழைக்கும் மக்கள் என்பது மிகவும் பரந்த அர்த்தத்தினைக் கொண்டுள்ளது. அது தொடர்ந்தும் தொழிற்சாலையில், பண்ணையில் உழைப்பினை சிந்தும் ஓர் குழுவினருடன் மாத்திரம் வரையறுக்கப்படுவதில்லை. நவீன தொழில்நுட்ப உலகில் மனித ஊழியத்துக்கு பரந்தளவான பல சந்தர்ப்பங்கள் உருவாகியுள்ளதுடன் அதற்கமைவாக வேலை செய்யும் மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகளும் நாளுக்கு நாள் மாற்றமடைந்து வருகின்றன.
சம்பிரதாய மே தினக் கொண்டாட்டத்துடன் மாத்திரம் சுருங்கி விடாது இந்த நவீன போக்குகள் மற்றும் சவால்களை இனங்கண்டு வேலை செய்யும் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கவும்இ அவர்களது நலன்கள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரச மற்றும் தனியார் துறைகள் ஒன்றிணைந்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவும் விரிவான வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல் என்பன அத்தியாவசியமானதாகும்.
நவீன தொழிநுட்ப உலகில் புதிய சமூக, அரசியல் சவால்களுக்கு மத்தியில் தொழிலாளர்களுக்குரிய கௌரவம் கிடைக்கக் கூடிய, தேசத்தின் முன்னேற்றத்திற்காகத் தமது பணியை ஆற்றுவதற்குத் தேவையான பின்புலம் உருவாகின்ற, அவர்களது உழைப்புக்குரிய பெறுமானம் கிடைக்கும் சிறப்பான எதிர்காலமொன்றிற்காக உரையாடல் ரீதியான, இணக்கப்பாடு மிக்க பணியினை மேற்கொள்ள இம்முறை மே தினத்தை சந்தர்ப்பமாக மாற்றிக் கொள்வோம் என்று அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM