உரை­யாடல் ரீதி­யான இணக்­கப்­பாட்டை உரு­வாக்­குவோம் : மேதின வாழ்த்துச் செய்­தியில் பிர­தமர்

Published By: Priyatharshan

01 May, 2017 | 10:46 AM
image

சிறப்­பான எதிர்­கா­ல­மொன்­றிற்­காக உரை­யாடல் ரீதி­யான, இணக்­கப்­பாடு மிக்க பணி­யினை மேற்­கொள்ள இம்­முறை மே தினத்தை சந்­தர்ப்­ப­மாக மாற்றிக் கொள்வோம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

பிர­தமர் வெளி­யிட்­டுள்ள மே தினச் செய்­தி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதில்  மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 

வேலை செய்யும் மக்­களின் வியர்வை மற்றும் உழைப்பின் மீதே முழு உல­கமும் தங்­கி­யுள்­ளது. வர­லாறு முழு­வதும் அவர்கள் தமது உரி­மை­க­ளுக்­காக மேற்­கொண்ட தொடர்ச்­சி­யான போராட்டம் மற்றும் அர்ப்­ப­ணிப்பின் விளை­வாக உலகின் கவ­னத்தை தொழி­லாளர் மீது ஈர்க்கும் வகையில் சர்­வ­தேச ரீதி­யாக மே தினத்தைக் கொண்­டா­டு­வது ஆரம்­பா­கி­யது.

தற்­கா­லத்தில் உழைக்கும் மக்கள் என்­பது மிகவும் பரந்த அர்த்­தத்­தினைக் கொண்­டுள்­ளது. அது தொடர்ந்தும் தொழிற்­சா­லையில், பண்­ணையில் உழைப்­பினை சிந்தும் ஓர் குழு­வி­ன­ருடன் மாத்­திரம் வரை­ய­றுக்­கப்­ப­டு­வ­தில்லை. நவீன தொழில்­நுட்ப உலகில் மனித ஊழி­யத்­துக்கு பரந்­த­ள­வான பல சந்­தர்ப்­பங்கள் உரு­வா­கி­யுள்­ள­துடன் அதற்­க­மை­வாக வேலை செய்யும் மக்கள் எதிர்­நோக்கும் சவால்கள் மற்றும் பிரச்­சி­னை­களும் நாளுக்கு நாள் மாற்­ற­ம­டைந்து வரு­கின்­றன.

சம்­பி­ர­தாய மே தினக் கொண்­டாட்­டத்­துடன் மாத்­திரம் சுருங்கி விடாது இந்த நவீன போக்­குகள் மற்றும் சவால்­களை இனங்­கண்டு வேலை செய்யும் மக்­களின் உரி­மை­களைப் பெற்றுக் கொடுக்­கவும்இ அவர்­க­ளது நலன்கள் தொடர்­பாக நட­வ­டிக்­கை­களை மேற்கொள்­ளவும் அரச மற்றும் தனியார் துறைகள் ஒன்­றி­ணைந்து கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்­ளவும்  விரி­வான வேலைத்­திட்­ட­மொன்றைத் தயா­ரித்தல் என்­பன அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­தாகும்.

நவீன தொழி­நுட்ப உலகில் புதிய சமூக, அர­சியல் சவால்­க­ளுக்கு மத்­தியில் தொழி­லா­ளர்­க­ளுக்குரிய கௌரவம் கிடைக்கக் கூடிய, தேசத்தின் முன்­னேற்­றத்­திற்­காகத் தமது பணியை ஆற்­று­வ­தற்குத் தேவை­யான பின்­புலம் உரு­வா­கின்ற, அவர்களது உழைப்புக்குரிய பெறுமானம் கிடைக்கும் சிறப்பான எதிர்காலமொன்றிற்காக உரையாடல் ரீதியான, இணக்கப்பாடு மிக்க பணியினை மேற்கொள்ள இம்முறை மே தினத்தை சந்தர்ப்பமாக மாற்றிக் கொள்வோம் என்று அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54