மே தினத்தைக் கொண்டாடும் உலகவாழ் தொழிலாளர்களோடு நானும் இணைந்து கொள்வதோடு, மனித சமூகத்தின் சுதந்திரத்திற்காக வும் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்காக வும் தமது வியர்வையையும், கண்ணீரையும் சிந்தி போராடிய, குரல் கொடுத்த, உயிர் தியாகம் செய்த அனைத்து தொழிலாளர் சகோதரர்களுக்கும் எனது கௌரவமான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று இன்று கொண்டாடப்படும் மேதினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மனித உழைப்பினால் உருவாக்கப்பட்ட மேற்கட்டுமானமானதுஇ மனித உழைப்பின் பெருமைமிக்க உன்னத தன்மை முன் மண்டியிட்ட வரலாற்று ரீதியான நிகழ்வை நினைவுகூரும் முகமாக கொண்டாடப்படும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே தினத்தைக் கொண்டாடும் உலகவாழ் சகோதர தொழிலாளர் சமூகத்திற்கு மரியாதை செலுத்தியே இந்த செய்தியை வெளியிடுகிறேன்.
மக்களை சங்கிலிகளால் பிணைத்துஇ அவர்களை தமது உடமையாகக் கருதி முதலாளித்துவ வர்க்கத்தினர் செயற்பட்ட காலம் முதல் தொழிலாளர் உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஒரே மேசையில் அமர்ந்து முதலாளி வர்க்கத்துடன் பேரம் பேசக்கூடிய தற்போதைய காலம் வரை தொழிலாளர்கள் கடந்து வந்த பாதையானது அவர்கள் சிந்திய இரத்தத்தினாலும் வியர்வையினாலும்இ கண்ணீராலும் உருவாக்கப்பட்டது என்பதை சர்வதேச தொழிலாளர் தினம் எமக்கு நினைவூட்டுகிறது.
எஸ்.டபிளியூ.ஆர்.டீ.பண்டாரநாயக்க வினால் மே தினம் விடுமுறை தினமாக பிரகடனம் செய்யப்பட்டது முதல் இலங்கை வாழ் தொழிலாளர் சமூகத்திற்கும் தாம் வென்றெடுத்த வெற்றிகளை சீர்திருத்திப்பார்க்க கிடைக்கும் வாய்ப்பாகவே அமைகின்றது எனலாம்.
இத்தகைய நீண்டகால போராட்டப் பாதையில் புடம்போடப்பட்டு, நவீன ஜனநாயக சமூகக் கட்டமைப்பிலும் முக்கியமான சக்தியாக செயற்படும் தொழிலாளர் வர்க்கம் நாட்டில் ஜனநாயகத்தை வெற்றி பெறச் செய்யும் போராட்டத்திலும் முக்கிய பங்கினை வகித்தது என்பதையும் நினைவு கூர விரும்புகிறேன்.
நாட்டில்நல்லிணக்கத்தைஏற்படுத்தல், பொருளாதாரசுபீட்சத்தைஅடைதல்உள்ளிட்டநாடுஎதிர்நோக்கியிருக்கும்சவால்களைவெற்றிகொள்ளும்செயற்பாடுகளிலும்தொழிலாளர்சமூகத்தின்மீதுசுமத்தப்பட்டுள்ளபொறுப்புகைவிடமுடியாததாகும்.
தொழிலாளர்கள் தமது உரிமைகளையும், வரப்பிரசாதங்களையும் மேலும் பலப்படுத்திக்கொள்ளும் அதே சமயம், நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார செயன்முறை மற்றும் உலகின் புதிய போக்கு ஆகியவற்றையும் அறிந்து, தெரிந்து, பொறுப்புமிக்கதொரு சமூக சக்தியாக செயற்படுவார்கள் என நான் நம்புகிறேன்.
1917 ஆம் ஆண்டு நிகழ்ந்த உன்னத ரஷ்ய புரட்சியின் வெற்றிகரமான நூற்றாண்டு பூர்த்தியடையும் இவ்வாண்டில் கொண்டாடப்படும் மே தினமானது, பலமான உந்து சக்தியை எம் அனைவருக்கும் பெற்றுக் கொடுத்துள்ளது. அந்த உற்சாகத்துடன் இன்று மே தினத்தைக் கொண்டாடும் உலகவாழ் தொழிலாளர்களோடு நானும் இணைந்து கொள்வதோடு, மனித சமூகத்தின் சுதந்திரத்திற்காகவும், தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்காகவும் தமது வியர்வையும், கண்ணீரையும் சிந்தி போராடிய, குரல் கொடுத்தஇ உயிர் தியாகம் செய்த அனைத்து தொழிலாளர் சகோதரர்களுக்கும் எனது கௌரவமான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM