தேசிய பிரச்சினைக்கான தீர்வு ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் மக்களுக்குச் சமர்ப்பிப்போம், மக்களின் ஆலோசனைகளை நாம் பெறுவோம், எமது மக்களுக்கு ஏற்பில்லாத தீர்வை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம். மக்களின் கருத்துக்களுக்கு உட்பட்டுத்தான் நாங்கள் இறுதி முடிவெடுப்போம். அது உறுதியானதாகும் என எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தற்போது ஏற்பட்டுள்ள வாய்ப்பை நாங்கள் உதாசீனம் செய்யக்கூடாது. இப்படிப்பட்ட வாய்ப்பு இதற்குப் பின்னர் வரும் என நாங்கள் எதிர் பார்க்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியவர் நாங்கள் அனைத்து தரப்பினரையும் அனுசரித்துச்செல்கின்றோம். அதற்காக அடிப்படை விடயங்களை பிடி கொடுக்குமளவிற்கு நடந்துகெர்ள்ளவில்லை என்றார்.
தந்தை செவ்வாவின் 40ஆவது நினைவு தின நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு களுதாவளை கலாசார மண்டபத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக் கிளை ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்;ட எதிர்க்கட்சித்தலைவர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
பல இனங்களைச் சோர்ந்த மக்கள் வாழ்கின்ற நாடுகளில் ஆட்சி ஒழுங்குகள் அதற்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும். தந்தை செல்வா 1947 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். பின்னர் அவர் இந்நாட்டின் அரசியல் ஆட்சிமுறை ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல அந்த வாதத்தினை முன்வைத்து இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்து ஒரு அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். அந்தப் பயணம் இன்றும் தொடர்கின்றது. அந்தவிதத்தில் தான் நாங்களும் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.
எமக்குத் தேவை எமது மக்களின் ஒற்றுமையாகும். எமது மக்கள் அனைவரும் ஒருமித்து நிற்கவேண்டும் இதற்கு நாங்கள் ஒரு அரசியல் தீர்வைப் பெறுவதற்கு முயற்சிக்கின்றோம். நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தமிழரசுக் கூட்டத்தில் இவ்விடையங்கள் தொடர்பில் மிகவும் தெளிவாக பேசினோம்.
கருமங்கள் முன்னெடுக்கப்படுகின்போது பகைமையை வளர்க்காமல், அனைவரினதும் ஆதரவுகளைப் பெற்று இந்நாட்டிலுள்ள மக்களும் அதனை ஆதரிக்கக் கூடிய வகையில், நிதானமாக நீண்ட நோக்குடன் சர்வதேசத்தில் தடம் பதிக்கக் கூடிய விதத்தில் நாங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
உருவாக்கப்படுகின்ற அரசியல் சாசனம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். பின்னர் நாட்டு மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும். இது ஒரு சாதாரணமான விடையமல்ல, நடைமுறைச் சாத்தியமற்ற விடையமுமல்ல.
எம்முடைய அரசியல் சூழலில் அதனை அடையக் கூடிய நிலமை இருக்கின்றது. அதற்காக நாங்கள் அனைவரினதும் அதரவுகளைப் பெற்றுச் செயற்பட்டு வருகின்றோம். அதற்காக நாங்கள் பிடி கொடுக்கும் அளவிற்கு நடந்து கொள்ளவில்லை. அவ்வாறு நடந்து கொள்ளவும் கூடாது.
எமது மக்களுக்கு ஏற்பில்லாத தீர்வை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம், ஏற்கவும் முடியாது, ஏற்கப் போவதுமில்லை, அது உறுதி. தீர்வு ஸ்த்தாபிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் மக்களுக்குச் சமர்ப்பிப்போம், மக்களின் ஆலோசனைகளை நாம் பெறுவோம். மக்களின் கருத்துக்களுக்கு உட்பட்டுத்தான் நாங்கள் இறுதி முடிவெடுப்போம். இந்நிலையில் ஏற்பட்டுள்ள வாய்ப்பை நாங்கள் உதாசீனம் செய்யக்கூடாது. இப்படிப்பட்ட வாய்ப்பு இதற்குப் பின்னர் வரும் என நாங்கள் எதிர் பார்க்க முடியாது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM