அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அமைப்புகள் கொழும்பு மற்றும் கண்டிப் பகுதிகளில் முன்னெடுக்கும் மே தினக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு பாதுகாப்பளிப்பதற்கு சுமார் 7600க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புப் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமைய கம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் 15 மே தினக் கூட்டங்கள், பேரணிகள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இடம்பெறவுள்ளன. இதற்காக 4100 பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள்.
அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் மற்றும் பேரணியானது கண்டி கெட்டம்பே, மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இதற்கென சுமார் 3500 பொலிஸார் பாதுகாப்புப் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.
மேற்குறிப்பிட்ட இரு பகுதிகளுக்கு மேலதிகமாக முன்னெடுக்கப்படும் மே தினக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பு மற்றும் கண்டிப் பகுதிகளில் மே தினத்தன்று விசேட போக்குவரத்துத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM