டென்மார்க்கில் நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த இலங்கையரது சிகிச்சைகள் பலனளிக்காததால், அவரது செயற்கை உயிர் காப்பு சாதனத்தின் இயக்கத்தை நிறுத்திவிட வைத்தியசாலை முடிவெடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.
கசுன் நிரோஷன் ஃபேர்டினன்ட் (36) என்ற சமையல் கலைஞர், கடந்த திங்களன்று தனது காரில் நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்தார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்ததால் மரம் ஒன்றுடன் வேகமாகச் சென்று மோதினார். இதில் அவர் படுகாயமுற்றார்.
இதையடுத்து, ஹெலிகொப்டர் மூலம் கசுன் வைத்தியசாலைக்குத் தூக்கிச்செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. உடல் நிலை தேறலாம் என்ற நம்பிக்கையில் செயற்கை உயிர் காப்பு சாதனமும் அவருக்குப் பொருத்தப்பட்டது.
இந்த நிலையில், அவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால், செயற்கை உயிர் காப்பு சாதனத்தை அகற்றிவிட வைத்தியசாலை முடிவெடுத்துள்ளது.
டென்மார்க்குக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் வந்தவர் கசுன். டென்மார்க்கின் பிரபலமான ‘சோல்ட் எண்ட் பெப்பர்’ உணவகத்தில் பணியாற்றிவந்தார். திருமணமான இவர், தனது மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் விரைவில் டென்மார்க்குக்கு அழைத்துக்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில்தான் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
மிகவும் கனிவான மனமும், தோழமை உணர்வுடன் பழகும் சுபாவமும் கொண்ட கசுனின் இழப்பு அதிர்ச்சி தருவதாக குறித்த உணவகத்தின் உரிமையாளர் கூறியுள்ளார்.
இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து டென்மார்க் பொலிஸார் ஆராய்ந்து வருகிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM